வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Sunday, February 17, 2019

என்னைத் தேடி ஓர் வெண்ணிலா ****

**** என்னைத் தேடி ஓர் வெண்ணிலா ****

விழிகள் படபடக்க
விரல்கள் துடிதுடிக்க
காத்திருக்கின்றாள் அவள்
செல்லிடப் பேசியில்
என் அழைப்பிற்காக!

வயிற்றில் பசியிருந்தாலும்
வெளியினில் அமர்ந்திருப்பாள்
பொறுமையுடனும் காதலுடனும்
என் அழைப்பிற்காக!

கோபமென்பதை அறியாதவள்
அன்பின் உருவகமவள்
என்னைத் தேடி
மண்ணில் பூத்திட்ட
வெண்ணிலா அவள்!
  

அருகருகே இல்லாவிடினும்
அவளின் அன்பினால்
என்னை ஆட் கொள்பவள்!

No comments:

Post a Comment