வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 19, 2019

ஏனிந்த ராகங்களோ

>>>>>>>ஏனிந்த ராகங்களோ

நிசப்த வனத்திலும்
அமைதியாய் துயில் கொண்டேன்
அவளின் நினைவுகளோடு!
ஒப்பனை யில்லாமலே
அழகாய் வலம்வந்தேன்
அவளோடு பயணித்த
நினைவுகளோடு!
ஓசைகள் இல்லாமலே
ராகங்கள் ரசித்தேன்
அவளின் விழியசைவில்!




துயரிலும் கரம்பிடித்தே
நடத்தியவள் இன்று
என் பாதையென்று சொல்லியே
மாற்று வழியினில்
அவள் மட்டும் தனியாய்!

அன்பின் மொழியால்
காதல் பாடம்
கற்றுத் தந்தவள் ஏனோ
ஸ்வரங்கள் இல்லா
முகாரி ராகத்தை
தந்தே கடக்கின்றாள்!

ஏனிந்த ராகங்களோ
மனதின் வலிகளை
மறந்திடவா அல்லது
மீட்டிடவா!

No comments:

Post a Comment