வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 13, 2011

எங்கும் காதல்... எதிலும் காதல்.





நான் மலரை
விரும்புகிறேன்
மணமாய் காதல் இருப்பதால்......

நான் மழையை
விரும்புகிறேன்
குளிராய் காதல் இருப்பதால்.......

நான் தென்றலை
விரும்புகிறேன்
இதமாய் காதல் இருப்பதால்........

நான் ஒலியை
விரும்புகிறேன்
இசையாய் காதல் இருப்பதால்..........

நான் ஒளியை
விரும்புகிறேன்
உருவமாய் காதல் இருப்பதால்........

நான் அன்னையை
விரும்புகிறேன்
அன்பாய் காதல் இருப்பதால்.....

நான் நண்பனை
விரும்புகிறேன்
நட்பாய் காதல் இருப்பதால்.........

நான் சூரியனை
விரும்புகிறேன்
நிழலாய் காதல் இருப்பதால்.......

நான் கல்வியை
விரும்புகிறேன்
இலக்கியமாய் காதல் இருப்பதால்.......

நான் மனைவியை
விரும்புகிறேன்
இதயமாய் காதல் இருப்பதால்.........

No comments:

Post a Comment