வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, February 23, 2012

நீ வருவாயென....................


என் இனியவளே,,
வெயில் கொளுத்தும்
சாலையில் ஆறுதல் தரும்
மரம் போன்று என்
வாழ்வின் போராட்டத்தில்
என்னுடன் பங்கிட வந்தவளே........
நான் உன்னை
நேசிக்கின்றேன்.... விரும்புகின்றேன்
ஆனால் நீயோ
நானுன் அடிமையாக வில்லையென்று
சொல்கின்றாய்.......
இன்பத்திலும் துன்பத்திலும்
நானிருப்பேன் என்றாய்
ஆனால் இன்றோ ‍
துன்பமே நானானேன்
என்று சொல்லி சென்றாய்.....
உந்தன் வாழ்வை
உயரவைப்பேன் என்றாய்
ஆனால் இன்றோ
என் மதிப்பையும்
பாழாக்கிச் சென்றாய்........
மண‌மாலையிட்டு வந்தவள்
மரணத்தில் தான் பிரிவாள் என்றேன்
ஆனால் நீயோ
என்னினைவுகளுக்கு மரண மாலையிட்டு
சென்று விட்டாய்........
விட்டுக் கொடுத்தலும்
அன்பின் பகுதிதான் என்றேன்....
ஆனால் நீயோ
என்னை விட்டே
சென்று விட்டாய்..
நான் விதைக்கும்
தூய அன்பின் விதை
உன்னில் மட்டும்
நரகலான பலனைத்
தருகின்றதே எப்படி??????????
உன்னை நேசித்தேன்
கவிமொழி பாடினேன்
ஆனால் நீயோ
பொய் உதடுகளின்
பின்னால் சென்று விட்டாய்......
உன்மேல் கோபங் கொண்டேன்
கோபத்தில் தான்
அதிகமதிகமாய் நேசித்தேன் உன்னை
ஆனால் நீயோ
என்மேல் வெறுப்பை
உமிழ்ந்து சென்று விட்டாய்.......
உனக்கு அதிர்ந்து
பேசக்கூட தெரியாதென்றேன்
ஆனால் நீயோ
மன வன்மத்துடன்
புனித உறவுகளைக் கூட‌
கொச்சைப்படுத்தி சென்று விட்டாய்..........
சென்று மாதங்கள்
இரண்டானாலும் நீயோ
என்னைப் பற்றி
அவதூறுகளும் பொய்களும்
ஆனால் நானோ
உதடுகளில் பொய் புன்னகையுடனும்
உள்ளத்தில் அழுகையுடனும்
உன்னை நேசிக்கும் அன்பிலும்
என் நேசம் கொஞசம் கூட‌
குறைவில்லை மாசில்லை.......
அன்பே
விட்டுக் கொடுத்து
வாழ்வதில் தவறில்லை.....
ஆனால்
விட்டுக் கொடுத்துக் கொண்டேயிருந்தால்
அதன் பெயர்
வாழ்க்கையில்லை...
அது அடிமைத்தனம்......
நானுன்னை நேசிக்கின்றேன்....
என் அன்புக் கூட
உன்னை அடிமையாக்க கூடாது
என்பதில் நான்
தெளிவாக உள்ளேன்...
ஆனால் நீயோ
என்னை மிரட்டி
உன்னை நேசிக்க வைக்கலாம்
என்று நினைக்கின்றாய்.........
என்னவளே,
மிரட்டி உருட்டி
அடிமையாக்கலாம்......ஆனால்
தூய அன்பை வாங்க முடியாது...........
என் இனியவளே
வாழ்க்கை என்பது
எது வரை என்பது
எனக்குத் தெரியாது.....
ஆனால் வாழ்வது
ஒரு நாளாக இருந்தாலும்
அந்த ஒரு நாளில்
உண்மையும்
அன்பும் காதலும்
நட்பும்
பணிவும் திமிரும்
ஊடலும் கூடலும்
புதிதுபுதிதாய் ஊறிக்
கொண்டேயிருக்க வேண்டும்
என்று எண்ணுபவன் நான்........
அந்த ஒரு நாள்
என் கடைசி நாளாயிருந்தாலும்
பரவாயில்லை.......
என்னை நேசித்து
என்னை நம்பி
என்னை விரும்பி
என்னை புரிந்து
என்னை வழியனுப்ப
வந்தால் போதும்.........
காலமெல்லாம் காத்திருப்பேன்
என் காதலியாய்
என் அன்பாய்
என் மனைவியாய்
என் தோழியாய்
என் அன்னையாய்
நீ வருவாயென....................

No comments:

Post a Comment