வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, February 23, 2012

என் மனதிற்கு....


என் மனமே,
துவண்டது போதும்
தூங்கியது போதும்
ஓய்ந்தது போதும்.....
இழந்ததை யெல்லாம்
எண்ணி யெண்ணி,
வருந்தியது போதும்.....
இழப்பதற்கு ஒன்றுமில்லை ‍‍ இனி
ஜெயிப்பதற்கு உலகமிருக்கின்றது...
நேற்றைய தினத்தை
குறித்து கவலைப்பட்டு
இன்றைய தினங்களை
இழந்தது போதும்......
இழந்ததை மீட்க‌
தோல்விகளை தோற்கடிக்க‌
இன்றே தொடங்கு
உன் லட்சிய பயணத்தை
இப்போழுதே தொடங்கு
இன்றே நல்ல நாள்..........
நாளை என்பது நிழல்
இன்று என்பதே நிஜம்.......
இன்றே தொடங்கு
உன் பயணத்தை
வெற்றியெனும் இலக்கடைய......
துணிந்து முதலடி
எடுத்து வை.......
உன் பயணத்தை
ஆரம்பித்ததே லட்சியத்தில்
பாதி வெற்றி..........
உறுதியான மனதோடும்
நல் திட்டத்தோடும்.
தொடர் முயற்சியோடும்
முன்னேறிச் செல்
முன்னேறு ‍ முன்னேறு.......
மீண்டும் தோல்விகள்
வந்தாலும் கலங்காதே
இலட்சியப் பயணத்தில்
இளைப்பாறு ஆனால்
ஓய்ந்து விடாதே.....
உன்னுள் எல்லாம்
எல்லாம் உனக்குள்
தொடர்ந்து செல்........
சோர்வை மனதினுள்
நுழைய விடாதே......
அவ்வாறு நுழையும் நிமிடத்தில்
மீசைப் புலவனின்
" அச்சமில்லை அச்சமில்லை
அச்ச மென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து
வீழ்கின்ற போதிலும்
அச்ச மென்பதில்லையே"
என்ற வரிகளை
உரமாக்கி துணிவுக் கொள்..........
மீண்டும் வீறு கொண்டெழும்
உன் மனம்........
மற்றவரை தோற்கடிக்க‌
வேண்டுமேன்று எண்ணாதே
நீ ஜெயிக்க்க
வேண்டு மென்று மட்டும்
உறுதிக் கொள்.........
உன் போராட்டத்தின் முடிவும்
உன் துயரின் முடிவும்
உன் முயற்சியின் முடிவும்.....
உனக்காக ‍‍‍ உனக்காக‌
காத்திருக்கின்றது.....
வெற்றி வெற்றி உனதே
தொடர்ந்து செல்........
முடிவு வரை செல்......
நிச்சயம் உனக்காக‌
வெற்றி தேவதை........
"ஜெய மாலையுடன்/"
காத்திருக்கின்றாள்........

No comments:

Post a Comment