வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, April 2, 2012

நின் கருவிழிகள்.....



என்னவளே,
என் விழிகள்
நின் கருவிழிகளில்
தேடியது எல்லாம்
அன்பு மட்டுமே......
எப்படி உன்னால்
உனது கருவிழிகளில்
ஒருபுறம் கொஞ்சு மொழியும்
மறுபுறம் நஞ்சு விதைகளையும்
வைக்க முடிந்தது........
நின் கருவிழிகளில்
காதலை பார்வையாய்
பொழிந்தாய் பின் எப்படி
உன்னால் பிரிவினையும்
நின் விழிகளால்
தர முடிந்தது............
உன் விழிகளில்
நடனமாடும் கருவிழிகளில்
என்றும் எப்போதும்
என்னுருத் தெரிய வேண்டுமென்று
தானடி உன்னிடம்
வரங் கேட்டேன்.......
ஆனால் நீயோ
வரத்தை
மறந்ததும் அல்லாமல்
அவ்விழிகளை நானும்
காணக் கூடாதபடி
சாபம் அல்லவா
தருகின்றாய்.......
என் துணையே
இன்றே யோசித்து
முடிவெடு.....
அன்பினால் நாம்
வாழும் வாழ்வில்
இன்பத்தின் நாட்களின்
ஆயுள் குறைந்துக் கொண்டே
செல்கின்றது......
பிரிவின் நாட்களைக்
கூட்டிக் கொண்டே.......
நான் இறக்கும் போது கூட‌
உன் கருவிழிகளில்
என்னுருத் தெரிய
வேண்டும் செல்லமே

No comments:

Post a Comment