வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, April 2, 2012

சிரிக்க‌ கொஞ்சம் நகைச்சுவை


ஆசிரியர் : நரகாசுவரனைக் கொன்றது யார்?
மாணவன் : அதைக் போலீஸ் பார்த்துப்பாஙக சார், நமக்கேன் வம்பு...
==========================
அப்பா : ஏன்டா, இன்னைக்கு உங்க ஸ்கூல்ல நடந்த ஓட்டப் பந்தயத்தில கலந்துகிட்டல, பரிசு கிடைத்ததா?
மகன் : போங்கப்பா, பயந்தாங்கொள்ளிப் பசங்க, எல்லாரும் எனக்குப் பயந்துட்டு, முன்னாடி ஓடிட்டாங்கப்பா....
===============================
திருமணத்திற்கு வந்த நண்பர்கள் இருவர்....
நண்பர் 1 :‍ டேய் மச்சி, கல்யாணத்திற்கு பொண்ணுக்கு ஏன் மேக்கப் போடுறாங்கன்னு தெரியுமா?
நண்பர் 2 : தெரியலையே மச்சி?
நண்பர் 1 : கிப்ட் எப்படி இருந்தாலும், பேக்கிங் நல்லா இருக்கனும்ல அதான்.....நீ வைக்கிற 51 மொய்க்கு அழகா ஒய்ட் கவர்ல வைக்கிறல அது மாதிரி தான்.....

1 comment:

  1. நகைச்சுவை நல்லாய் இருக்கு .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete