வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 18, 2014

உறவில் விரிசல்......

உறவுகளில் உறவுகளுக்குள்
 அன்பு நட்பு என்ற
 மலர் மலர்ந்திருக்கும் போது
விஷயங்கள் இல்லாவிடினும்
மணிநேரக் கணக்கில்
செல்பேசியில் உரையாடல்
நடக்கின்றது.....
தலைப்பு எதுவும்
இல்லாமலே
பேசி முடித்தப்பின்னும்
மனதில் சொல்லிமுடியா
மகிழ்ச்சி வருகின்றது......
ஆனால் அந்த உறவுகளில்
அன்பு நட்பு என்ற‌
மலரில் கிழிசல்கள்
உண்டாகும் போது
கடமைக்காக பேச எண்ணினாலும்
உரையாட மனம் விரும்புவதில்லை
பேசும் வார்த்தைகளிலும்
உயிர் இருப்பதில்லை............
பேசி முடித்தப்பின்னும்
மனதில் ஏனோ
இனம்புரியாத வெற்றிடம்
தானாகவே வருகின்றது......

No comments:

Post a Comment