வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 18, 2014

வாழ்க்கை அதன் பாதையில்......

வாழ்வில் உயர‌  வேண்டுமென்ற‌
கனவுகளும்
வாழ்க்கையில் முன்னேற‌
எடுக்கும் முயற்சிகளும்
தொடர்ந்து தொடராய்
சென்று கொண்டேயிருந்தாலும் 
வாழ்க்கை
அதன் பாதையில்
எவ்வித‌ சலனமில்லாமல்
சென்றுக் கொண்டிருக்கின்றது
வாழ்வினை 
மாற்றயெண்ணி செய்த‌
முயற்சிகளும் செயல்களும்
அனுபவ‌ பாடங்களை 
கற்பித்து விட்டு
மனதில் ஏனோ
தோற்று விட்டோமென்ற
சோகங்களை மட்டும் 
விட்டுச் செல்கின்றது .....
ஆனால் வாழ்க்கை
அதன் பாதையில்
தான் விரும்பியபடியே......

No comments:

Post a Comment