வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, October 1, 2016

முயற்சிக்கு முடிவேது


 ** முயற்சிக்கு முடிவேது **



தாயின் கருவில்
துளியாய்
விழுந்தது முதல்
ஆரம்பித்தது
உயிரின் முயற்சி!!!!

முயற்சிக்கு
எல்லையேது
முயற்சிக்கு
முடிவேது

               



முயற்சிக்கும் உயிரே
இவ்வுலகில் வாழவும்
தகுதி யாகின்றது!!

முயற்சித்தால் முன்னேற்றம்
இல்லையேல் வளர்ச்சியேது????

                             


முயற்சிக்காமல்
ஓரிடத்திலேயே தேங்கும்
கழிவு சாக்காடையாக அல்லாது
முயற்சித்து முயறித்து
நதியாக ஓடி
எல்லைகளை விரிவாக்குவோம்!!!!


                            


முயற்சிக்கு முடிவேது
துடிக்கின்ற இருதயம்
நிற்கும் வரையிலும்
முயற்சிக்கு முடிவில்லை!!!

No comments:

Post a Comment