வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, October 29, 2016

தீபாவளி ...... தீபாவளி

** தீபாவளி **
கொண்டாடு கொண்டாடு
தீபாவளி கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு!!!

மகிழ்ச்சியாக கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு
பிறர்க்கும் மகிழ்ச்சி
தரும்படி கொண்டாடு!!!
Image may contain: text
புத்தாடை உடுத்திடு
புதியதாய் ஜொலித்திடு
பழையன கழிந்து
புதிய எண்ணங்களையுடுத்தி
கொண்டாடு கொண்டாடு!!!!
இனிப்புகளை வழங்கி
கொண்டாடு கொண்டாடு
இருக்கின்றவர்களுக்கு இல்லை
இல்லாதவர்களுக்கு இனிப்பை
வழங்கி கொண்டாடு!!!!
உன் கொண்டாட்டத்தில்
இல்லாதவரும்
முடியாதவரும் மகிழ்ந்தால்
அதுவே உனக்கு
புண்ணியஞ் சேர்த்திடும்
தீபாவளி..........
கொண்டாடு கொண்டாடு
தீபாவளி கொண்டாடு
பட்டாசு வெடித்து
கொண்டாடு பாதுகாப்புடன்
கொண்டாடு கொண்டாடு
பட்டாசின் ஒளியில்
குடும்பம் மட்டுமல்ல
அயல்வீட்டாரின் முகங்களும்
பிரகாசமாகும் படிக்கு
அன்புடன் கொண்டாடு
தீபாவளி கொண்டாடு!!!!!
கொண்டாட வீட்டில்
யாருமில்லையென
ஏங்காதே ஏங்காதே
தனிமையிலும்
கொண்டாடிடலாம்
தீபாவளியினை
ஆதரவற்றோருடனும்
முதியோருடனும்
சேர்ந்து கொண்டாடி
மகிழ்ந்து அவர்களையும்
மகிழ்வித்திடலாம்!!!!!

காக்கைக்கு சோறு
வைப்பதை விட
தெருவில் கையேந்தும்
கரங்களுக்கு ஒருவேளை
உணவளித்து பார்
அவரின் வாழ்த்தே
உன்வாழ்வில் தீபமாய்
ஒளிந்திடுமே!!!!
முடிந்தால்
குடும்பத்துடன்
தீபாவளியினை
ஆதரவற்றோர் இல்லத்தில்
உணவுடன் செலவிடு
கொண்டாடு தீபாவளியை
மழலைகளின் சிரிப்பினில்
மறைந்திடுமே உன்
கவலை களெல்லாம்.......
கொண்டாடு கொண்டாடு
தீபாவளி கொண்டாடு
மகிழ்வோடு கொண்டாடு
பிறரையும் மகிழ்விக்கும்படி
கொண்டாடு!!!!
வெடித்து சிதறிடும்
தீப்பொறிகளைப் போல்
வாழ்விலும் சிதறட்டும்
வண்ணவண்ணங்களாய்
மகிழ்வும் நட்பும்
அன்பும் பாசமும்
வளமும் நலமும்

No comments:

Post a Comment