வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, October 8, 2016

காதல் கவிதை

என் காதலை
உன்னிடம் சொல்லாமல்
காகிதத்தில் எழுதினேன்
கிறுக்கல் என்றார்
எந்தை!!

கவிதை என்றான்
நண்பன்
எப்படிடா என்றாய்
நீ
கிறுக்கல் கவிதை
என்பதையெல்லாம் விட
"எப்படிடா " என்ற ஒரே
வார்த்தை தான்
என்னுள் இன்னும்
ஒலிக்கின்றது.........




நின் பெயரை
எழுதிடவே
என்னை விட
என் எழுதுகோலும்
நின் பெயரை
தாங்கிடவே
காகிதமும்
தவம் புரிகின்றது!!!!

காகிதத்தில்
பக்க பக்கமாய்
எழுதுவதை விட
ஒரே வார்த்தையில்
எழுதிடும்
உன் பெயரே
அழகாய் தோன்றுகின்றது!!

No comments:

Post a Comment