வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, January 12, 2017

எனில் நாம் இந்தியர்


 *************** ** நாம் இந்தியர் ***

ஜல்லிக்கட்டினை
தடை செய்தாலும்
பொங்கல்க்கு
விடுமுறை மறுத்தாலும்
நாம் மறுத்திடவோ
போராடவோ கூடாது
எனில் நாம் இந்தியர்!!!!

காவேரியில்
தண்ணீர் தரமறுத்து
அங்குள்ள
தமிழர்களையெல்லாம்
தீயிட்டழித்து கொள்ளையிட்டாலும்
நாம் கன்னடர்களை
கவனமாய் காத்து
எப்பவும் போல
மின்சாரம் அளித்தோம்
எனில் நாம் இந்தியர்!!!!!

முல்லை பெரியாறு
அணை பிரச்சனையில்
தமிழ் பெண்களை
துயில் உரித்தப் போதும்
அமைதி காத்திட்டோம்
இங்குள்ள கேரள
நிறுவனங்களுக்கு
பாதுகாப்பு பணியினை
பலமாக சிறப்பாக செய்தார்கள்
தமிழக காவல்துறையினர்
எனில் நாம் இந்தியர்!!!!!

எம் தொப்புள் கொடியாம்
ஈழத்தமிழினம்
இந்திய அரசின்
ஆயுத உதவியுடன்
கொன்றொழிந்த போதும்
அமைதி காத்திட்டோம்
எனில் நாம் இந்தியர்!!!!

எங்கோ பயனடைய
மீத்தேன் திட்டத்தை
எம் விவசாயியின்
விவசாய நிலத்தில்
புதைத்த போதும்
அமைதி காத்திட்டோம்
எனில் நாம் இந்தியர்!!!!!!

அண்டை மாநிலத்தில்
மீனவர்கள் அயல் நாட்டின்
இராணுவ வீரர்களால்
கொல்லப்பட்டப் பொழுது
சட்ட மன்றம் மட்டுமல்ல
பாராளுமன்றமும் பேசியது
அக்கொலையாளிகளை தண்டிக்க
ஆனால் நூற்றுக்கணக்கான
மீனவர்கள் நட்பு நாட்டின்
இராணுவத்தினரால்
அடிக்கப் பட்டும்
உடைமைகளை இழந்தப் போதும்
வாய் திறக்கவில்லை இந்தியா
எனில் நாம் இந்தியர்!!!

மரித்த உழவர்களுக்கும்
மரித்த மீனவர்களுக்கும்
எங்களின் மனங்கவர்ந்த
தமிழக முதல்வர்
மரணத்தின் மர்மத்தையெல்லாம்
கவனிக்காத
இந்திய அரசு
தமிழர்களின் வீரத்திலும்
தமிழர்களின் பண்பாட்டிலும்
தடை போடுவது ஏனோ??????

அன்றைக்கு கச்சத்தீவு
இன்றைக்கு ஜல்லிக்கட்டு
இப்படி தமிழரின்
உரிமைகளெல்லாம்
பறிக்கப் பட்டாலும்
போராடுகின்ற
தமிழரை அடிதடி நடத்தியும்
வழக்கு போட்டும்
கடமையாற்றிடுவார்கள்
எங்கள் காவல்துறையினர்
எனில் நாங்கள் இந்தியர்!!!!

நாம் இந்தியர்
நாம் இந்தியரென்று
இந்தியர்கள் அனைவரும்
சகோதரர்கள் என்று
தமிழர்கள் தான்
நினைக்கின்றோம்
ஆனால் இந்தியர் யாரும்
நினைக்க வில்லை
தமிழர்கள்
இந்தியர்கள் தானென்று

No comments:

Post a Comment