வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, January 4, 2017

கொஞ்சம் சிரிங்க பாஸ்..

கொஞ்சம் சிரிங்க பாஸ்
1. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ அத்தனை இறக்கைதான் இருக்கும்.!
------------------------------------------------------------------------------------
2. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும் ,கோதுமய அரைச்சா கோதுமை மாவு வரும்,அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?
------------------------------------------------------------------------------------
3. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
------------------------------------------------------------------------------------
4. கால்ல முள் குத்தாம இருக்குறதுக்காக செருப்பு போடுறீங்க .,
அதே மாதிரி மீன் சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு செருப்ப முழுங்கிட்டு சாப்பிட்ட மீன் முள் குத்தாது .! ( நீதி : எனக்கு மீன் பிடிக்காது )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
5. வடச் சட்டில வாடா சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க ,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டிலையா ..?
------------------------------------------------------------------------------------
6. ஒரு தத்துவம் :
'கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் காக்கையாக மாறினால்."!
------------------------------------------------------------------------------------
7. மாட்ட ஆடா மாத்த முடியுமா .?
முடியும் . ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா AADU அப்படின்னு மாறிடும்.!
------------------------------------------------------------------------------------
8. Nokia மொபைலுக்கும் Bluetooth மொபைலுக்கும் என்ன வித்தியாசம் ..?
Nokia மொபைல்ல Bluetooth சாப்ட்வேர் இருக்கும் ஆனா Bluetooth மொபைல்ல Nokia சாப்ட்வேர் இருக்காது.!
------------------------------------------------------------------------------------
9. ஒரு உண்மை :
கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும் .,
ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறாது .!
------------------------------------------------------------------------------------
10. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க , நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப் போட்டேன் , அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?
------------------------------------------------------------------------------------
11. மறுபடியும் சந்தேகம் :
இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி தமிழ்ல ஏன் இல்ல ..?
------------------------------------------------------------------------------------
12. கரப்பான் பூச்சிக்கு ஏன் மீசை இருக்குனு தெரியுமா ..?
கரப்பான் = கரப்பு + ஆண் ; அதுல ஆண் வரதால மீசை இருக்கு .!

No comments:

Post a Comment