வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, January 31, 2017

கவிதை எழுதிடவே...........

#ஜோ

கவிதை எழுதிடவே
முயல்கின்றேன் நானும்
சந்திப் பிழைகளும்


மரபு பிழைகளும்
என்முன் நின்று
பயங் காட்டுகின்றதே!!

சீர்களும் வரிகளும்
சீராக இல்லாமலே
சிந்திக்க வைக்கின்றதே!!!!



எழுதிடத் தான்
முயலுகின்றேன்
ஆனால் எழுதிடவே
முடியவில்லை!!!
காதலை
காதலிக்கின்றேன்
நட்பினை
நேசிக்கின்றேன்
ஆனால் ஒரு
காதல் கவிதை
எழுதிடவும் இயலவில்லை
நட்புக் கவிதை
இயற்றிடவும் முடியவில்லை!!!

                     

கிறுக்கினதை
நான் கவிதை என்றேன்
ஆனால் காதல்
என்னை ஏளனம் செய்கின்றது
உன் வரிகளுக்குள்
என்னை அடக்கிவிட்டாயென்று!!
எழுதினதை
நட்பு கவிதையென்றேன்
நட்பு என்னை
கண்டு சினங்கொள்கின்றது
மனுக்குலத்தின்
உரியதுணை என்னை
உன் சொற்களுக்குள்
அடக்கி விட்டதெப்படியென்று!!!

No comments:

Post a Comment