வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, March 4, 2019

>>>>>>>> என்னோடு வருவாயென.....

>>>>>>>> நீ வருவாயென......

ஆளில்லாத கொடும் எந்தன்
பாலைவன வாழ்விலும்
சிலகாலங்கள் - நிழல்தந்திடும்
மரங்களாய் உன் காதல்!
புரிய வைத்திடவும்
புரிந்துக் கொள்ளவுமே
முயன்றேன் அதிகமாய்
உள்வாங்கிய காதல் அழகே!


அன்றைக்கு தென்றலாய்
வீசிட்ட காதலும் - இன்றைக்கு
காதல் கோட்டையை அசைத்தே
சூறையாடிடும் புயலாய் வீசியதே!
நான் பாடிய குறும்பா
உன் செவிகளில்
எட்டவில்லையே!
நான் எழுதிய கிறுக்கல்கள்
உன் விழிகளில்
பட வில்லையே!
விசமென்று தெரிந்தும்
என்னைத்தேட வைக்கின்றது
உன் மறுதலிப்புகள்!
என்னிலை மறந்தே
உன்னை நெருங்கியே உந்தன்
அன்பினை நாடுகின்றேன்!
உயிரிலும் உணர்விலும்
நினைவிலும் அணுவிலும்
கலந்திட்ட என் காதலை
வார்த்தையில் கொன்றிட நினைப்பதுமேனோ?
பூந்தோட்டத்தில் மலரில்லாத
காம்பாய் நான்மட்டும் தனியே
விழுந்தாலும் - மீண்டும் நீ
வருவா யென்றெண்ணியே
காத்திருக்கின்றேன்!

No comments:

Post a Comment