வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 23, 2010

அன்னையின் அன்பு..........

பள்ளித் தோழரின் அன்பு
முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை.......

கல்லூரி நட்பின் அன்பு
மூன்றாண்டு முடியும் வரை.......

பெண் தோழியின் அன்பு
அவள் தகப்பன் சொல்லும் வரை.........

நேசித்த காதலியின் அன்பு
அவள் திருமணம் முடியும் வரை.......

பயணத் தோழரின் அன்பு
பயணம் முடியும் வரை........

சகோதர கோதரியின் அன்பு
திருமணம் முடியும் வரை.......

வியாபார பார்ட்னரின் அன்பு
இலாபம் வரும் வரை..........

ஆனால்

பெற்ற அன்னையின் அன்பு
அவள் நினைவிருக்கும் வரை..........

No comments:

Post a Comment