வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, February 19, 2010

நான் .........

என்னவளே,
நீ தலை தாழ்ந்த போது
உன்னை நோக்கி என்
தலை உயருகின்றது
நீ என்னை
நோக்கும் போதோ
என் பார்வை
தடுமாறுகின்றது.....

உன்னை
பின்பற்றி வருகின்றேன்
நீ பின்னோக்கும் போதோ
என் கால்கள்
தடம் மாறுகின்றது.........
உன்னை முந்திச் செல்ல‌
என் மனம் மறுக்கின்றது..........

உன்னிடம்
பேசும் படி
என்னுள்ளும்
என் வீட்டு
நிலைக் கண்ணாடி முன்பும்
பேசியவை அதிகமதிகம் ......

உன்னிடம்
இதுவரை
பேசிய துமில்லை
பழகியது மில்லை
ஆனால்
நான் உன்னுடன் தான்
வாழ்கின்றேன்
வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன்

நீ என்னருகில்
இல்லா விட்டாலும்
நீ வெளியிடும்
காற்றைத் தான் நான்
சுவாஷிக்கின்றேன்

நான்
உன்
உன்னையே நினைக்கும்
உனக்காகவே வாழும்
உன்னையே சுவாஷிக்கும்
"ஒரு தலைக் காதலன்"

No comments:

Post a Comment