வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, February 19, 2010

என் காதலி


என்னவளை
மலருக்கு ஒப்பிட மாட்டேன்
எனில் மலர்
மாலையில் வாடி விடும்

என்னவளை
நிலவுக்கு ஒப்பிட மாட்டேன்
எனில் நிலவு
அமாவாசையில் தேய்ந்து விடும்

என்னவளை
விண்ணுக்கு ஒப்பிட மாட்டேன்
எனில் விண்
மேகத்தில் மறைந்து விடும்

ஆம் எனில்
என்னவளின் அழகை
ஒப்பிடும் அளவிற்கு
இறைவன் இன்னும்
அழகுப் பொருளை
படைக்க வில்லை

No comments:

Post a Comment