வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, September 26, 2016

அஹிம்சை மரித்த தினம் இன்று :::


அஹிம்சை மரித்த தினம் இன்று :::

தமிழீழ மக்களுக்காய்
தமிழீழ மக்களின்
சுதந்திரத்திற்காய்
எவ்வழியிலும் புலிகள்
போராடுவார்கள் என்பதை
அண்ணன் திலீபனின்
அஹிம்சை போராட்டம்
உலகிற்கு உணர்த்தியது!!!!!

                               



 தமிழீழத்தின்
குறைந்த  பட்ச
கோரிக்கைகளுக்கு
கூட செவிசாய்க்காது
அஹிம்சையால்
சுதந்திரம் பெற்ற
இந்திய அரசு
அஹிம்சை வழி
போராட்டத்திற்கு
மதிப்ப ளிக்காது
எம் அண்ணனின்
உயிர் பிரிந்த தினம் இன்று!!!!








அடக்கு முறைகளுக்கும்
இனவெறி அரசியலுக்கும்
அஹிம்சை அல்ல
ஆயுதமே தீர்வு
என்பதை மரணத்தின் மூலம்
சொல்லிச் சென்றார்
அண்ணன் திலீபன்!!







அன்றைக்கு அண்ணனின்
உயிர் பிரிந்ததை
கண்டு தமிழீழ மக்களின்
கண்ணீரால் நனைந்தது ஈழம்!!

இன்றும் அண்ணா
உன் மரணத்தை எண்ணிடும்
வேலையில் நெஞ்சமெல்லாம்
வலிக்கின்றது இன்னும்
நீ போராடிய இலட்சியம்
அடைய முடியவில்லை யென்று
இன்று
உலகில்
அஹிம்சை மரித்த தினம்!!!!

No comments:

Post a Comment