வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, March 20, 2019

நான் ரசிக்கும் அழகே...........


பாவை உந்தன்
வில் புருவத்தில்
காதலெனும் அன்பேற்றி
பேதை எந்தன்
நெஞ்சில் வீசினாயே!

அழகிற்கு மேலும் அழகாய்
உந்தன் விழிகள்!
விழிகளின் பார்வை எந்தன்
உயிரையும் உறைய வைக்குதடி!

உன்னைக் கண்ட நொடிமுதலாய்
என்னை இழந்தே இருக்கின்றேன்
உந்தன் வெட்கமெனும் ஆடைவிலக்கி
மென்னுதடுகளால் மறுமொழி சொல்லடி!
         

உந்தன் பிறை நெற்றி ரசித்தே
எந்தன் பசியும் மறந்தேனடி!
முகமறைக்கும் விரல்கள்
மென்மையின் உருவகமடி!

No comments:

Post a Comment