வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, March 6, 2019

பறையடி பெண்ணே...... பறையடி

>>>>>பறையடி பெண்ணே.........

பறையடி பெண்ணே
பறையடி!
ஓட்டுரிமையை விலைப்பேசும்
மாக்கள் திருந்திட பறையடி!
ஓட்டுக்காய் காலில்விழும்
அரசியல் வியாதிகள் நீங்கிட
பறையடி பெண்ணே பறையடி!
ஏழை மக்களின்
வலி உணராது
பணக்கார வர்க்கத்திற்கு
சாமரம் வீசிடும் தலைமைகள்
தலை சாய்ந்திடும் மட்டும்
மதசாதி மோதல்களினால்
ஆதாயந் தேடிடும்
கயவர்களை சமூகத்தை விட்டு
அகற்றும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
உணர்வுகளை மழுங்கடித்து
சாக்கடையில் விழவைத்திடும்
மதுவை அகற்றும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
கவிஞர்களின் பேனா முனைகள்
நடுநிலையோடு சமூகத்தை
சீரமைக்கும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
தமிழகத்தின் வளங்களை
சூறையாடிடும் திருடர்களை
தமிழர்களே விரட்டி அடித்திடும்வரை
பறையடி பெண்ணே பறையடி!
கட்சிக்காரன் அல்ல
சாதிக்காரன் அல்ல
மதத்துக்காரனாய் அல்ல
தமிழர்களாய் மக்கள்
ஒன்றிணையும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!

இனியொரு மீனவன்
சிங்களவனாய் தாக்கப்படுமுன்
பறையடி பெண்ணே பறையடி!
தமிழர்கள்
இன உணர்வோடும்
மொழி உணர்வோடும்
வீறுகொண்டு எழும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
அநியாயமாய் கொடூரமாய்
கொன்றொழிக்கப்பட்ட
ஈழத்தமிழர்களுக்கு
நியாயம் கிடைக்கும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!



பறையடி பெண்ணே பறையடி!
தமிழகத்தில் தமிழர்கள்
உரிமையோடும் சுதந்திரத்தோடும்
வாழ்ந்திடும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!

No comments:

Post a Comment