உந்தன் மன்னவனின் இதயத்தில்
அடித்திடும் முரசொலிகள்
நின் செவிகளில்
இன்னும் எட்டவில்லையோ அன்பே!
நின் பெயரையே இசைத்திடும்
மன்னவனின் இதயத்தாளம்
உன்றன் மனதை தான் மயக்கவில்லையோ!!
இன்னும் அன்பே!
நிலவில்லாத வானமாய்
வெறுமையாய் காட்சியளித்திடும்
என் வாழ்வின் வலிகள்
மங்கை உந்தனுக்கு புரியவில்லையோ அன்பே!
No comments:
Post a Comment