வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, March 8, 2019

பெண்ணெனும் பேரழகு....

********* பெண்ணெனும் பேரழகு

பாரதி விரும்பிய புதுமைப் பெண்ணாய்
வாழ்ந்திட்டாலும் நடந்திட்டாலும்
பெண்மையின் குணங்களை
அணிந்து சென்றிடும் பெண்ணே பேரழகு!

அநீதி கண்டு ஒதுங்கி செல்லாமல்
எதிர்த்து நின்று போராடிடும்
இன்றைய நவீன கண்ணகிகளே பேரழகு!



மணமுடித்தவன் சிறு விரிசலென்றாலும்
பேசிடும் தொலைபேசியில் குடும்பத்தை பிரித்திடும்
இழிசெயலுக்கு அடங்கிடாது
எதிர்த்து நின்று போராடி ஒட்டுமொத்த
பெண்ணினத்திற்கும் விடுதலை வாங்கிய
பெண்களே பேரழகு!

கோபத்திலும் வார்த்தைகளை
அடுத்தவர் மனம் புண்படாது பேசிடும்,
துயரங்களை அடுத்தவர் தோளில் ஏற்றிடாது
அடுத்தவர்க்கு ஆதரவாய் வாழ்ந்திடும்
பெண்ணே பெண்களிலெல்லாம் பேரழகு!
 —

No comments:

Post a Comment