வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, March 7, 2019

சொல்லாதே யாரும் கேட்டால்

>>>>>>சொல்லாதே யாரும் கேட்டால்

இனியவளே
நம் காதலை
காற்றிடம் சொல்லிவிடாதே
காற்றின் ஈரப்பதம்
மறைந்துவிடுமே!
நம் காதலை
மலரிடம் சொல்லிவிடாதே
மலரும் மணத்தை
இழந்துவிடுமே!


நம் காதலை
நிலவிடம் சொல்லிவிடாதே
நிலவும் தன்னொளியை
அகற்றிவிடுமே!
நம் காதலை
யாரிடமும் சொல்லிவிடாதே!
பொறாமையில் மறைந்திடுமே!

No comments:

Post a Comment