எங்களது குடும்பத்தினர் அணைவரும் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். மேலும் சில நேரங்களில் சில சம்பவங்கள் எதிர்பாராமல் பெரிய "காமெடி" ஆகி விடுகின்றது. அவற்றில் ஒன்றுத் தான் இந்த உண்மைச் சம்பவம்..........
என் தங்கையின் மகளுக்கு (ஒரு வயது குழந்தை) காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தோம். அப்போது எனது அம்மாவுக்கும், எனது சகோதரிக்கும் இடையே தொலைப் பேசியில் நடந்த ஒரு உரையாடல் :
அம்மா : என்ன பாப்பா, எல்லா விஷயத்திற்கும் ஏற்பாடு பண்ணியாச்சா?
சகோதரி : பண்ணிட்டேன் அம்மா, டேபிள் சேர்க்கு அவர் (கணவர்) இப்போ தான் சொல்லப் போறார் அம்மா.
அம்மா : காது குத்த ஆசாரிக்கு சொல்லியாச்சா?
சகோதரி : அதுக்கு வேற சொல்லனுமா..... இப்பத் தான் வந்துட்டுப் போறார்......
அம்மா : (புரியாமல்) இப்பத் தானா, எதற்கு ?????/
சகோதரி : வீட்டு ஜன்னல்ல ஓட்டைப் போட இப்பத்தான் ஆசாரி வந்து முடிச்சிட்டுப் போறார், ம் மறுபடியும் வரச் சொல்லனும்மா???????
(என்னத் தோழர்களே புரிந்ததா என் அம்மா சொன்னது " காது குத்தும் ஆசாரி" ஆனால் என் தங்கைச் சொன்னது " மர ஆசாரி"... )
வணக்கம்
உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!
Thursday, June 24, 2010
வாங்க வாங்க சிரிக்கலாம்....
தேர்வு முடிந்ததும் :
மாணவன்1 : வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.
மாணவன்2 : இப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா?
****** **************
மாணவன்1 : பரிட்சை முடிஞ்சிடிச்சி.. இனிமே என்ன செய்யலாம்னு
முடிவெடுத்து இருக்க?
மாணவன்2 : இனிமே படிக்கவேக் கூடாதுன்னு முடிவெடுத்து இருக்கேன்டா..
****** **************
ஆசிரியர் : எங்கடா உன் நண்பனக் காணோம்?
மாணவன் : டெல்லிக்கு போய் இருக்கான் சார்?
ஆசிரியர் : ஏன்..
மாணவன் : நீங்க தானே சொன்னீங்க. விண்ணப்பத்த கேபிடல்ல" பூர்த்தி செய்ய சொல்லி.
****** **************
குளிக்கும் போது
நண்பர் 1 : டேய் மச்சான் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா!
இல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!
நண்பர் 2 : மொதல்ல நீ பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி.
அதுதான் எங்களுக்கு நல்லது!
****** **************
பெத்த பாசம்
வந்தவர் : இன்ஸ்பெக்டர் சார்.. என் பையனக் காணோம்.. எப்படியவது
இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள கண்டுபிடிச்சிடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
வந்தவர் : இல்லேன்னா வீட்ல இருந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும்
செலவழிச்சுடுவான்.
****** **************
வரவேற்பாளர்
நண்பர் 1 : அவனுக்கு ஆனாலும் ரொம்பத்தான் அலட்டல் ஜாஸ்தி டா..
நண்பர் 2 : ஏன்டா அப்படி சொல்ற?
நண்பர் 1 : பின்ன என்னடா உங்க வீட்டுத் திண்ணையிலே எப்பவும் ஒரு பாட்டி
உட்கார்ந்து இருக்காங்களே! யார் அவங்கன்னு கேட்டதுக்கு,
அவங்கதான் எங்க வீட்டு ரிசப்ஷனிஸ்ட்டுன்னு சொல்றான்.
****** **************
மாணவன்1 : வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.
மாணவன்2 : இப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா?
****** **************
மாணவன்1 : பரிட்சை முடிஞ்சிடிச்சி.. இனிமே என்ன செய்யலாம்னு
முடிவெடுத்து இருக்க?
மாணவன்2 : இனிமே படிக்கவேக் கூடாதுன்னு முடிவெடுத்து இருக்கேன்டா..
****** **************
ஆசிரியர் : எங்கடா உன் நண்பனக் காணோம்?
மாணவன் : டெல்லிக்கு போய் இருக்கான் சார்?
ஆசிரியர் : ஏன்..
மாணவன் : நீங்க தானே சொன்னீங்க. விண்ணப்பத்த கேபிடல்ல" பூர்த்தி செய்ய சொல்லி.
****** **************
குளிக்கும் போது
நண்பர் 1 : டேய் மச்சான் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா!
இல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!
நண்பர் 2 : மொதல்ல நீ பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி.
அதுதான் எங்களுக்கு நல்லது!
****** **************
பெத்த பாசம்
வந்தவர் : இன்ஸ்பெக்டர் சார்.. என் பையனக் காணோம்.. எப்படியவது
இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள கண்டுபிடிச்சிடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
வந்தவர் : இல்லேன்னா வீட்ல இருந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும்
செலவழிச்சுடுவான்.
****** **************
வரவேற்பாளர்
நண்பர் 1 : அவனுக்கு ஆனாலும் ரொம்பத்தான் அலட்டல் ஜாஸ்தி டா..
நண்பர் 2 : ஏன்டா அப்படி சொல்ற?
நண்பர் 1 : பின்ன என்னடா உங்க வீட்டுத் திண்ணையிலே எப்பவும் ஒரு பாட்டி
உட்கார்ந்து இருக்காங்களே! யார் அவங்கன்னு கேட்டதுக்கு,
அவங்கதான் எங்க வீட்டு ரிசப்ஷனிஸ்ட்டுன்னு சொல்றான்.
****** **************
நண்பர்களின் நகைச்சுவைகள் :::
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
***
ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு
நண்பன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.
***
டேய் நம்ம கூட்டத்தில ரௌடியோட பையன சேர்த்தது தப்பா போச்சுடா!
ஏன்டா? என்னடா பண்ணான்?
ஒழுங்க தலைய சீவிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.
***
ஏன்டா எப்படா உன் கல்யாணம்?
காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா தற்கொலை பண்ணிக்குவேன்னு காதலியோடா அப்பா மிரட்டறாருடா
நண்பன் : கல்யாணத்துக்கு தடையா இருந்தா கொலை பண்ணிடுவேன்னு நீ மிரட்டு
******
மணி : என் லவர் சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும்.
சேகர் : இதென்ன பெரிசு என் லவர் சிரிச்சா பல்லே விழும்.
***
டேய் எனக்கு ஒரு சந்தேகமுடா...
சொல்லு தீர்த்து வைக்கிறேன்.
முதல் முதல்ல மின்சாரம் கண்டுபிடிச்சப்ப என்னடா நடந்து இருக்கும்?
ஒருவருக்கு பயங்கரமா "ஷாக்" அடிச்சிருக்கும்
உன்ட்டா போய் கேட்டேன் பாரு
***
1 : உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்கப்பா கிட்ட 1 ரூபா கேக்கற.
மொத்தம் உன் கிட்ட எவ்வளவு டா இருக்கும்?
2: ஒரு ரூபா இருக்கும்.
1 : டேய் உனக்கு கணக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.
2 : உனக்குத்தான் எங்க அப்பாவை பத்தி தெரியாதுடா
***
நம்ம ரமேஷ் ஒரு நூறு ரூபா இல்லாம கஷ்டப்படறாண்டா?
ஏன் உன்கிட்ட கேட்டானா?
ஊஹும் நான் கேட்டேன். இல்லன்னு சொல்லிட்டான்.
***
பூக்காரி பொண்ண கட்டினது பெரிய தப்புடா
ஏன்டா அப்படி சொல்ற?
தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறாடா.
***
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
***
ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு
நண்பன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.
***
டேய் நம்ம கூட்டத்தில ரௌடியோட பையன சேர்த்தது தப்பா போச்சுடா!
ஏன்டா? என்னடா பண்ணான்?
ஒழுங்க தலைய சீவிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.
***
ஏன்டா எப்படா உன் கல்யாணம்?
காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா தற்கொலை பண்ணிக்குவேன்னு காதலியோடா அப்பா மிரட்டறாருடா
நண்பன் : கல்யாணத்துக்கு தடையா இருந்தா கொலை பண்ணிடுவேன்னு நீ மிரட்டு
******
மணி : என் லவர் சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும்.
சேகர் : இதென்ன பெரிசு என் லவர் சிரிச்சா பல்லே விழும்.
***
டேய் எனக்கு ஒரு சந்தேகமுடா...
சொல்லு தீர்த்து வைக்கிறேன்.
முதல் முதல்ல மின்சாரம் கண்டுபிடிச்சப்ப என்னடா நடந்து இருக்கும்?
ஒருவருக்கு பயங்கரமா "ஷாக்" அடிச்சிருக்கும்
உன்ட்டா போய் கேட்டேன் பாரு
***
1 : உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்கப்பா கிட்ட 1 ரூபா கேக்கற.
மொத்தம் உன் கிட்ட எவ்வளவு டா இருக்கும்?
2: ஒரு ரூபா இருக்கும்.
1 : டேய் உனக்கு கணக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.
2 : உனக்குத்தான் எங்க அப்பாவை பத்தி தெரியாதுடா
***
நம்ம ரமேஷ் ஒரு நூறு ரூபா இல்லாம கஷ்டப்படறாண்டா?
ஏன் உன்கிட்ட கேட்டானா?
ஊஹும் நான் கேட்டேன். இல்லன்னு சொல்லிட்டான்.
***
பூக்காரி பொண்ண கட்டினது பெரிய தப்புடா
ஏன்டா அப்படி சொல்ற?
தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறாடா.
***
காதலர்களின் நகைச்சுவைகள்
காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.
காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.
காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.
******* ****** *******
காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .
காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . .
******* ****** *******
காதலி : ஏங்க நாளை முதல் உங்களைப் பார்க்க பீச்சுக்கு வர மாட்டேன்
காதலன் : ஏன் டியர்.....
காதலி : எங்கப்பா என்னை மிரட்டுறாருங்க....
காதலன்: என்ன டியர் மிரட்டுறார்.....?
காதலி : இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுருவேன்னு சொல்றார்.....
******* ****** *******
காதலன் : அன்பே, நான் உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன் டியர். வா ஓடிப் போகலாம்.....
காதலி : முதிலில் ஒரு "அப்பாச்சி" வண்டி வாங்கு, என்னால ஒடி வர முடியாது......
******* ****** *******
காதலன் : என் அன்பே, ஒரு வேளை சாப்பாடுன்னாலும் நான் உனக்கு உழைத்து போடுறேன், வா
காதலன் : அப்படின்னா, அடுத்த வேளை சோற்றுக்கு.....
காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.
காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.
******* ****** *******
காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .
காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . .
******* ****** *******
காதலி : ஏங்க நாளை முதல் உங்களைப் பார்க்க பீச்சுக்கு வர மாட்டேன்
காதலன் : ஏன் டியர்.....
காதலி : எங்கப்பா என்னை மிரட்டுறாருங்க....
காதலன்: என்ன டியர் மிரட்டுறார்.....?
காதலி : இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுருவேன்னு சொல்றார்.....
******* ****** *******
காதலன் : அன்பே, நான் உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன் டியர். வா ஓடிப் போகலாம்.....
காதலி : முதிலில் ஒரு "அப்பாச்சி" வண்டி வாங்கு, என்னால ஒடி வர முடியாது......
******* ****** *******
காதலன் : என் அன்பே, ஒரு வேளை சாப்பாடுன்னாலும் நான் உனக்கு உழைத்து போடுறேன், வா
காதலன் : அப்படின்னா, அடுத்த வேளை சோற்றுக்கு.....
Wednesday, June 23, 2010
திருமணமானவர்களின் நகைச்சுவைகள்
குடி குடியைக் கெடுக்கும்னு சொல்றது ரொம்ப சரி
எப்படிடா சொல்ற
கல்யாணம் ஆனதும் மனைவி குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாளே.
********** *******************
உங்களுக்கும் உங்க கணவருக்கும் பொதுவான அம்சம் என்ன்?
ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் ஆச்சு.
********** *******************
கணவன் : நம்முடைய திருமண நாளை நீ எப்படி கொண்டாட விரும்புகிறாய்?
மனைவி : நான் இதுவரை போய் பார்க்காத இடத்திற்கு போக வேண்டும்
என்று விரும்புகிறேன்.
கணவன் : அப்படியா.... சரி அப்போ நம்ம வீட்டு கிட்சனுக்குப் போகலாம்.
********** *******************
மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்?
சினேகிதி : அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்.
மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்
********** *******************
கணவர் :விவாகரத்திற்கு முழு காரணம் என்னோட...
நண்பர் : யாருடா?
கணவர் : என்னோட திருமணம்தான்.
********** *******************
நண்பர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
கணவர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய
கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
********** *******************
நண்பர் : நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் மனைவியின் கைகளை
பிடித்தபடியே இருக்கின்றீர்கள்.
கணவன் : நான் கையை விட்டுவிட்டால் உடனே அவள் பொருட்கள்
வாங்க கடைக்குச் சென்றுவிடுவாள்.
********** *******************
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை
காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு
வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..
கணவன் : ?!?!?!
**************************
கணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை!
மனைவி : பின்ன இருக்காதா . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!
கணவன் : ?!?!?
**************************
கணவன் : எப்போதெல்லாம் நீ மனவருத்தத்துடன் இருக்கிறாயோ அப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் போய் நின்று கொண்டு, நீ எவ்வளவு
அழகாக இருக்கிறாய். என்னால் நம்பவே முடியவில்லை என்று சொல்.
உனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.
மனைவி : நிஜமாகவா...
கணவன் : ஆனால் இதை அடிக்கடி செய்ய வேண்டாம்.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
**************************
மனைவி : ஏங்க டி.வில படத்தைப் பார்த்து ஏங்க அழுகிறீங்க?
கணவன் : அடியே, அது படமல்ல, நான் வாழ்க்கையில் கடைசியாய்
சந்தோஷமாய் இருந்த நாள், அதாண்டி நம்ம கல்யாண சிடி......
மனைவி : அதுக்கு என்ன இப்போ?
கணவன் : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே என்று நினைத்து அழுகின்றேன்.....
**************************
எப்படிடா சொல்ற
கல்யாணம் ஆனதும் மனைவி குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாளே.
********** *******************
உங்களுக்கும் உங்க கணவருக்கும் பொதுவான அம்சம் என்ன்?
ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் ஆச்சு.
********** *******************
கணவன் : நம்முடைய திருமண நாளை நீ எப்படி கொண்டாட விரும்புகிறாய்?
மனைவி : நான் இதுவரை போய் பார்க்காத இடத்திற்கு போக வேண்டும்
என்று விரும்புகிறேன்.
கணவன் : அப்படியா.... சரி அப்போ நம்ம வீட்டு கிட்சனுக்குப் போகலாம்.
********** *******************
மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்?
சினேகிதி : அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்.
மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்
********** *******************
கணவர் :விவாகரத்திற்கு முழு காரணம் என்னோட...
நண்பர் : யாருடா?
கணவர் : என்னோட திருமணம்தான்.
********** *******************
நண்பர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
கணவர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய
கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
********** *******************
நண்பர் : நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் மனைவியின் கைகளை
பிடித்தபடியே இருக்கின்றீர்கள்.
கணவன் : நான் கையை விட்டுவிட்டால் உடனே அவள் பொருட்கள்
வாங்க கடைக்குச் சென்றுவிடுவாள்.
********** *******************
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை
காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு
வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..
கணவன் : ?!?!?!
**************************
கணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை!
மனைவி : பின்ன இருக்காதா . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!
கணவன் : ?!?!?
**************************
கணவன் : எப்போதெல்லாம் நீ மனவருத்தத்துடன் இருக்கிறாயோ அப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் போய் நின்று கொண்டு, நீ எவ்வளவு
அழகாக இருக்கிறாய். என்னால் நம்பவே முடியவில்லை என்று சொல்.
உனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.
மனைவி : நிஜமாகவா...
கணவன் : ஆனால் இதை அடிக்கடி செய்ய வேண்டாம்.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
**************************
மனைவி : ஏங்க டி.வில படத்தைப் பார்த்து ஏங்க அழுகிறீங்க?
கணவன் : அடியே, அது படமல்ல, நான் வாழ்க்கையில் கடைசியாய்
சந்தோஷமாய் இருந்த நாள், அதாண்டி நம்ம கல்யாண சிடி......
மனைவி : அதுக்கு என்ன இப்போ?
கணவன் : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே என்று நினைத்து அழுகின்றேன்.....
**************************
என் மனைவி....
இறைவனால்
எனக்காக
எனக்கு மட்டும்
அளிக்கப் பட்ட
உயிருள்ள பரிசு அவள்.......
தேடித் தேடி
அலைந்தேன் அவளைக் காண
ஆனால்
தேடி வந்தாள்
என் வாழ்வில் இணைய..
மனங்கள் இணைந்தன
நம்
குடும்பங்களும் இணைந்தன
தோல்விகளே
கண்டு வந்த
என் வாழ்வில்
நீ தான் எந்தன்
முதல் வெற்றி.....
எப்போதும் உந்தன்
புன்னகை முகம் கண்டால்
போதுமடி எனக்கு
உணவு ஒன்றும் வேண்டாம்.....
உன்னை மட்டுமல்லாது
என்னையும்
நின் சேயையைப் போல்
கவணிக்கும்
நீ போதுமடி எனக்கு.......
தோல்விகளால் துவண்ட
எனக்கு இறைவன் அளித்த
ஆறுதல் பரிசு.......
என்மீது நான் கொண்ட
நம்பிக்கையை விட
உன்மீது நான் கொண்ட
நம்பிக்கை அதிகமடி
உன் ஆறுதல் வார்த்தைகள்
போதுமடி.... அதற்காகவே
எத்தனை முறை வேண்டுமானாலும்
இன்னும் தோற்க
தயாராக உள்ளேன்.......
நின் தூக்கத்திலும்
என்மீது கொண்ட
அன்பை
நான் உணர்கின்றேன்.....
உன்னைப் பற்றி
கவிதை எழுதத் தான்
நாட் கணக்கில்
வார கணக்கில்
மாத கணக்கில்
யோசிக்கி ன்றேன்.... ஆனால்
வார்த்தைகள் ஒன்றும்
தோன்ற வில்லை......
அப்போது தான்
என் மனச் சாட்சி சொல்லியது
" இதயத்திற்கு அப்பால்
உள்ளவர்களை நினைத்து
கவிப் பாவும் பாடலாம்
கட்டுரையும் எழுதலாம்....
ஆனால் உன்
இதயமாகவே வாழ்பவளைப் பற்றி
எழுத இன்னும்
உலக மொழிகளில்
வார்த்தைகள் இல்லை நணபரே"" என்று....
என்
வாழ்க்கைப் பயணத்தின்
நின் முகங்கண்டே
என்
இறுதி மூச்சை
நிறுத்த வேண்டும்......
எனக்காக
எனக்கு மட்டும்
அளிக்கப் பட்ட
உயிருள்ள பரிசு அவள்.......
தேடித் தேடி
அலைந்தேன் அவளைக் காண
ஆனால்
தேடி வந்தாள்
என் வாழ்வில் இணைய..
மனங்கள் இணைந்தன
நம்
குடும்பங்களும் இணைந்தன
தோல்விகளே
கண்டு வந்த
என் வாழ்வில்
நீ தான் எந்தன்
முதல் வெற்றி.....
எப்போதும் உந்தன்
புன்னகை முகம் கண்டால்
போதுமடி எனக்கு
உணவு ஒன்றும் வேண்டாம்.....
உன்னை மட்டுமல்லாது
என்னையும்
நின் சேயையைப் போல்
கவணிக்கும்
நீ போதுமடி எனக்கு.......
தோல்விகளால் துவண்ட
எனக்கு இறைவன் அளித்த
ஆறுதல் பரிசு.......
என்மீது நான் கொண்ட
நம்பிக்கையை விட
உன்மீது நான் கொண்ட
நம்பிக்கை அதிகமடி
உன் ஆறுதல் வார்த்தைகள்
போதுமடி.... அதற்காகவே
எத்தனை முறை வேண்டுமானாலும்
இன்னும் தோற்க
தயாராக உள்ளேன்.......
நின் தூக்கத்திலும்
என்மீது கொண்ட
அன்பை
நான் உணர்கின்றேன்.....
உன்னைப் பற்றி
கவிதை எழுதத் தான்
நாட் கணக்கில்
வார கணக்கில்
மாத கணக்கில்
யோசிக்கி ன்றேன்.... ஆனால்
வார்த்தைகள் ஒன்றும்
தோன்ற வில்லை......
அப்போது தான்
என் மனச் சாட்சி சொல்லியது
" இதயத்திற்கு அப்பால்
உள்ளவர்களை நினைத்து
கவிப் பாவும் பாடலாம்
கட்டுரையும் எழுதலாம்....
ஆனால் உன்
இதயமாகவே வாழ்பவளைப் பற்றி
எழுத இன்னும்
உலக மொழிகளில்
வார்த்தைகள் இல்லை நணபரே"" என்று....
என்
வாழ்க்கைப் பயணத்தின்
நின் முகங்கண்டே
என்
இறுதி மூச்சை
நிறுத்த வேண்டும்......
என் மனைவிக்கு......
என் துணையே,
அன்பே நீ நெருப்பாயிரு
என் வாழ்வில் தீபமேற்ற.......
அன்பே நீ குளிராயிரு
என் மனதினை குளிரூட்ட.....
அன்பே நீ ஆசிரியராயிரு
நான் புதியதை கற்றிட.........
அன்பே நீ தோழியாயிரு
என் நட்பினை வளர்க்க.......
அன்பே நீயென் முயற்சியாயிரு
நம் வாழ்வில் உயர்ந்திட.......
அன்பே நீயென் காதலியாயிரு
என் காதலை அனுபவித்திட
(என் மரணம் வரை)
அன்பே நீ நெருப்பாயிரு
என் வாழ்வில் தீபமேற்ற.......
அன்பே நீ குளிராயிரு
என் மனதினை குளிரூட்ட.....
அன்பே நீ ஆசிரியராயிரு
நான் புதியதை கற்றிட.........
அன்பே நீ தோழியாயிரு
என் நட்பினை வளர்க்க.......
அன்பே நீயென் முயற்சியாயிரு
நம் வாழ்வில் உயர்ந்திட.......
அன்பே நீயென் காதலியாயிரு
என் காதலை அனுபவித்திட
(என் மரணம் வரை)
காதல்...... காதல்...... காதல்....
விரித்த வலையில்
தானே மாட்டும்
அதிசயம்
காதலில் மட்டும்...........
விழுந்தவர் வீழ்ந்தாலும்
விழ வைத்தது
என்றும் அழியாது.............
சில நேரங்களில்
குப்பை மேட்டையும்
கோயில் கோபுரமாக்கும்...
கோயில் கோபுரங்களையும்
குப்பை மேடாகும்.....
சாதாரண மானவனையும்
சாதிக்க வைக்கும்
காதல்
இருபுறமும்
பட்டை தீட்டிய
வாள்......
காதலுக்காய் மரித்தோர் பலர்
ஆனால்
காதலென்றும்
உயிர்ப்பலி கேட்டதில்லை.......
காதலர்கள் மரித்தாலும்
காதலென்றும் மரித்த தில்லை..!
தானே மாட்டும்
அதிசயம்
காதலில் மட்டும்...........
விழுந்தவர் வீழ்ந்தாலும்
விழ வைத்தது
என்றும் அழியாது.............
சில நேரங்களில்
குப்பை மேட்டையும்
கோயில் கோபுரமாக்கும்...
கோயில் கோபுரங்களையும்
குப்பை மேடாகும்.....
சாதாரண மானவனையும்
சாதிக்க வைக்கும்
காதல்
இருபுறமும்
பட்டை தீட்டிய
வாள்......
காதலுக்காய் மரித்தோர் பலர்
ஆனால்
காதலென்றும்
உயிர்ப்பலி கேட்டதில்லை.......
காதலர்கள் மரித்தாலும்
காதலென்றும் மரித்த தில்லை..!
என் ஒரு தலைக் காதலிக்கு....
(என் கல்லூரி நாட்களில் நான் எழுதிய காதல் கிறுக்கல்)
என் உயிரின் உறவே,
வணக்கம்
உன்னையே நான்
நினைப்பதால் நான் நலம்!
நீ எப்படி உள்ளாய்?
இன்றளவும்
நான் உன்னுடன்
பேசியது மில்லை
பழகியது மில்லை
ஆனால்
நான் உன்னுடன் தான்
வாழ்கின்றேன் என்னுள்
நின் நினைவுகளோடு......
நான் கொண்ட
நினைவுகளை
ஓவியமாய் தீட்டிடத் தானாசை
ஆனால்
நான் ஓவியன் அல்ல
நான் தினந்தோறும்
என் நிழலுடன்
பேசுகின்றேன் ஆம்
எனக்கு என்னவென்று
எனக்கேத்
தெரிய வில்லை?
கையளவு
இதயத்தில்
அளவில்லா நிறையில்லாமல்
உனது நினைவு
வளர்ந்த தெப்படி?
இதுவரை
நீ என்னைக்
காண வேண்டுமென்று
உனது விழிகளை
திருப்பிய தில்லை
ஆனால்
எனது விழிகளோ
நீ வருந்திசை நோக்கியே எப்போதும்....
உன்
மௌனமெனும் மொழியால்
என்னிதயத்தில்
காதல் வளருகின்றதடி......
உன் நடை எனக்கு
நடனமாய் தெரிகின்றது....
உனது பேச்சுக்கள்
எனக்கே உரியவையென்று
அல்லவா
என்னிதயம் எண்ணுகின்றது.......
நீ செல்லும்
சைக்கிளும் என்னை
ஏளனம் செய்கின்றது
"தான் பிறவிப் பயனை
அடைந்து விட்டதென்று"
பாவம்
அதற்கெப்படித் தெரியும்
உன் தாய் தன்
உடலில் சுமந்ததை விட
நான் அதிகமாக
என்னுள்
சுமக்கி றேனென்று.....
விண்ணிலவை
நேசித்த என்னை
உன்னை நேசிக்க வைத்தது
உனது
அமைதி தானடி..........
கல்லூரி யெனும்
வசந்த ராகம் பாடிய
என்னை
காதலெனும்
மௌன ராகம்
பாட வைத்தாயே
கும்பலாய் ஆடிப்பாடி
திரிந்த யெனக்கு
தனிமையை நேசிக்கவும்
தனிமையில் பேசவும்
கற்றுத் தந்தாயே
அழிந்துப் போகும்
அழகிற்காய் அல்ல
அழியா காதலுக்காய்
உன்னை விரும்புகின்றேன்.
நீ
என்னைக் காதலிப்பதும்
என்னை மறுப்பதும்
உனது உரிமை
ஆனால்
என்னை
மறக்கச் சொல்வது
"தீண்டாமை குற்றம்"
அக்குற்றம்
என்றும் என்னால்
மன்னிக்கப் படாதது.......
மௌனத்தால் வளர்த்த
என் காதலை
நின்
மௌனத்தாலேயே
கலைத்து விடாதே......
என் உயிரின் உறவே,
வணக்கம்
உன்னையே நான்
நினைப்பதால் நான் நலம்!
நீ எப்படி உள்ளாய்?
இன்றளவும்
நான் உன்னுடன்
பேசியது மில்லை
பழகியது மில்லை
ஆனால்
நான் உன்னுடன் தான்
வாழ்கின்றேன் என்னுள்
நின் நினைவுகளோடு......
நான் கொண்ட
நினைவுகளை
ஓவியமாய் தீட்டிடத் தானாசை
ஆனால்
நான் ஓவியன் அல்ல
நான் தினந்தோறும்
என் நிழலுடன்
பேசுகின்றேன் ஆம்
எனக்கு என்னவென்று
எனக்கேத்
தெரிய வில்லை?
கையளவு
இதயத்தில்
அளவில்லா நிறையில்லாமல்
உனது நினைவு
வளர்ந்த தெப்படி?
இதுவரை
நீ என்னைக்
காண வேண்டுமென்று
உனது விழிகளை
திருப்பிய தில்லை
ஆனால்
எனது விழிகளோ
நீ வருந்திசை நோக்கியே எப்போதும்....
உன்
மௌனமெனும் மொழியால்
என்னிதயத்தில்
காதல் வளருகின்றதடி......
உன் நடை எனக்கு
நடனமாய் தெரிகின்றது....
உனது பேச்சுக்கள்
எனக்கே உரியவையென்று
அல்லவா
என்னிதயம் எண்ணுகின்றது.......
நீ செல்லும்
சைக்கிளும் என்னை
ஏளனம் செய்கின்றது
"தான் பிறவிப் பயனை
அடைந்து விட்டதென்று"
பாவம்
அதற்கெப்படித் தெரியும்
உன் தாய் தன்
உடலில் சுமந்ததை விட
நான் அதிகமாக
என்னுள்
சுமக்கி றேனென்று.....
விண்ணிலவை
நேசித்த என்னை
உன்னை நேசிக்க வைத்தது
உனது
அமைதி தானடி..........
கல்லூரி யெனும்
வசந்த ராகம் பாடிய
என்னை
காதலெனும்
மௌன ராகம்
பாட வைத்தாயே
கும்பலாய் ஆடிப்பாடி
திரிந்த யெனக்கு
தனிமையை நேசிக்கவும்
தனிமையில் பேசவும்
கற்றுத் தந்தாயே
அழிந்துப் போகும்
அழகிற்காய் அல்ல
அழியா காதலுக்காய்
உன்னை விரும்புகின்றேன்.
நீ
என்னைக் காதலிப்பதும்
என்னை மறுப்பதும்
உனது உரிமை
ஆனால்
என்னை
மறக்கச் சொல்வது
"தீண்டாமை குற்றம்"
அக்குற்றம்
என்றும் என்னால்
மன்னிக்கப் படாதது.......
மௌனத்தால் வளர்த்த
என் காதலை
நின்
மௌனத்தாலேயே
கலைத்து விடாதே......
என் மனதிற்கு நான் எழுதும் கிறுக்கல்
என் மனமே,
இலட்சியம் இல்லாத மனமே
தோல்விகளில் துவண்டது போதும்
ஏளனங்களினால் வருந்தியது போதும்....
எழுந்திரு........ விழித்திடு........
உன் எதிர்காலத்தை
அடுத்தவனிடம் கையைக் காட்டி
கேட்காதே...........
உன்னால் முடியும் என்று
உன்னை தட்டி எழுப்பு........
முயற்சிகளில் தோற்பவன்
தோல்வியாளன் அல்ல
முயற்சிகளை விடுபவனே
தோல்வியாளன்........
முன்னேறியவனைக் கண்டு
பொறாமைப் பட்டது போதும் அவன்
முன்னேறிய வழியை
அறிந்துக் கொள்......
எனக்கு வழிக்காட்ட
யாருமில்லை என்று வருந்தாதே
நான் முன்செல்ல
பாதையில்லை என்று தேம்பாதே
இன்றே
விழித்தெழு துணிவுடன்
எடுத்து வை உனது முதலடியை
அதுவே
நாளை எல்லோரும்
பின்பற்றும் சரித்திரமாகும்.......
எல்லோரிடமும் அன்பாயிரு
ஆனால் அடிமையாகாதே
அன்பைச் செலுத்து
அதற்கு விலைப் பேசாதே........
சிந்திக்க பழகிக் கொள்
சிந்தித்ததை செயலாக்க கற்றுக் கொள்
செயலினை பழக்கமாக்க மாற்று
பழக்கத்தை வழக்க மாக்கு
விழுந்தாலும் பரவாயில்லை
மீண்டும் ஓட
உயிர் உள்ளதென்று
உறுதியுடன் எழுந்திரு.........
விழும் போதெல்லாம்
எழுந்திருப்பவனே வீரன்......
போராடு போராடு
வெற்றி பெற வேண்டுமென்று அல்ல
தோல்வி அடையக் கூடாதென்று......
இன்றைய
உன் தரித்திரத்தை எண்ணாமல் போராடு
"அச்சமில்லை அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சமில்லை" என்ற
மீசைப் புலவனின் வரிகளை
மனதில் நினைத்து போராடு.....
உன் தரித்திரங்கள்
அதுவே
நாளைக்கு சரித்திரமாகும்......
நீ அடுத்தவர்
நிழலில் வளரும்
கொடியாயிராதே
அடுத்தவர்க்கு
நிழல் தரும்
விருட்சமாயிருக்க நினை......
விரைவில்
வெற்றி
உன்னைத் தேடி வரும்.......
வெற்றி உனதே..........
நீ
சாதாரணமானவன் அல்ல
நீ
சாதிக்கப் பிறந்தவன்.
இலட்சியம் இல்லாத மனமே
தோல்விகளில் துவண்டது போதும்
ஏளனங்களினால் வருந்தியது போதும்....
எழுந்திரு........ விழித்திடு........
உன் எதிர்காலத்தை
அடுத்தவனிடம் கையைக் காட்டி
கேட்காதே...........
உன்னால் முடியும் என்று
உன்னை தட்டி எழுப்பு........
முயற்சிகளில் தோற்பவன்
தோல்வியாளன் அல்ல
முயற்சிகளை விடுபவனே
தோல்வியாளன்........
முன்னேறியவனைக் கண்டு
பொறாமைப் பட்டது போதும் அவன்
முன்னேறிய வழியை
அறிந்துக் கொள்......
எனக்கு வழிக்காட்ட
யாருமில்லை என்று வருந்தாதே
நான் முன்செல்ல
பாதையில்லை என்று தேம்பாதே
இன்றே
விழித்தெழு துணிவுடன்
எடுத்து வை உனது முதலடியை
அதுவே
நாளை எல்லோரும்
பின்பற்றும் சரித்திரமாகும்.......
எல்லோரிடமும் அன்பாயிரு
ஆனால் அடிமையாகாதே
அன்பைச் செலுத்து
அதற்கு விலைப் பேசாதே........
சிந்திக்க பழகிக் கொள்
சிந்தித்ததை செயலாக்க கற்றுக் கொள்
செயலினை பழக்கமாக்க மாற்று
பழக்கத்தை வழக்க மாக்கு
விழுந்தாலும் பரவாயில்லை
மீண்டும் ஓட
உயிர் உள்ளதென்று
உறுதியுடன் எழுந்திரு.........
விழும் போதெல்லாம்
எழுந்திருப்பவனே வீரன்......
போராடு போராடு
வெற்றி பெற வேண்டுமென்று அல்ல
தோல்வி அடையக் கூடாதென்று......
இன்றைய
உன் தரித்திரத்தை எண்ணாமல் போராடு
"அச்சமில்லை அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சமில்லை" என்ற
மீசைப் புலவனின் வரிகளை
மனதில் நினைத்து போராடு.....
உன் தரித்திரங்கள்
அதுவே
நாளைக்கு சரித்திரமாகும்......
நீ அடுத்தவர்
நிழலில் வளரும்
கொடியாயிராதே
அடுத்தவர்க்கு
நிழல் தரும்
விருட்சமாயிருக்க நினை......
விரைவில்
வெற்றி
உன்னைத் தேடி வரும்.......
வெற்றி உனதே..........
நீ
சாதாரணமானவன் அல்ல
நீ
சாதிக்கப் பிறந்தவன்.
என் தோழி.......

என்னால் முடியாது
என்றி ருந்தேன்
ஏன் முடியாது என்று
என்னை சிந்திக்க வைத்தாள்!!!!!
என்னால் முடியுமா
என்றி ருந்தேன்
உன்னால் முடியும் என்று
என்னை முயற்சிக்க வைத்தாள்!!!!!
எல்லாம் இழந்தேன்
என்றி ருந்தேன்
இறக்க வில்லை என்று
என்னை உணர வைத்தாள்!!!!
எல்லம் தோற்றேன்
என்றி ருந்தேன்
" நீ சரியாக
முயல வில்லை என்று
எந்தவறுகளை திருத்த வைத்தாள்!!!!!
உதவுவார் யாருமில்லை
என்றி ருந்தேன்
" நீ உதவி வாங்கிட அல்ல
உதவியளித்திட பிறந்தவன் என்று
என்மதிப்பை உணர வைத்தாள்!!!!!
முன்னேற பாதையில்லை
என்றி ருந்தேன்
" நீ துணிந்து முதலடி
எடுத்து வை அதுவே
பிறர் பின்பற்றும் பாதையாகும்" என்று
என்னை முன்னேற்றப்
பாதையில் நடக்க வைத்தாள்!!!!!!
அவள் தான்
என் தோழி........
என் இன்பத்தில் அல்ல
என் துன்பத்தில் மட்டும்
பங்கு கொண்டவள்
என்றென்றும் அவள்
என் தோழி...................
என் இணையத் தோழி ஜெப ராணிக்கு.........
என் பிரியமான தோழியே,,
இணையத் தளத்தில்
அறிமுக மானாய்
நண்பன் என்றழைத்து
நட்பை மட்டுமே பரிமாறினாய்....
நாம் நம்மை
பார்க்க வில்லை யென்றாலும்
பாசமாய் அழைத்தாய்
சட்டைப் பையின்
கனத்தைப் பார்த்து
பழகும் இவ்வுலகில்
என் மனதின் கனத்தையும்
பகிர்ந்துக் கொண்டாய்.......
என் துயரில்
ஆறுதல் சொல்லும்
ஓர் தோழியாய்
என் தவறில்
என்னை கண்டித்திடும்
எந்தையாய் இருந்தாய்.....
தன் தேவைகளுக்கே
இறைவனை நாடுவோர் மத்தியில்
எனக்காய் என் தேவைக்காய்
உபவாஷீத்து
வேண்டுதல் செய்தாயே.....
நீ என்னுடன்
பழகியது
சில நாளென்றாலும்
நீ என்றும்
நான் மறவா
எந்தன் பிரியமானத் தோழி தானடி.........
நான் என்
வாழ்வின்
சாதனையில் உயரத்தில் இருந்தாலும்
நான் ஏறிய
படிக்கட்டுகளாய் என்றும்
உன் நட்பை பெருமையாய்
உலகிற்கு எடுத்துக் கூறுவேன்.........
இணையத் தளத்தில்
அறிமுக மானாய்
நண்பன் என்றழைத்து
நட்பை மட்டுமே பரிமாறினாய்....
நாம் நம்மை
பார்க்க வில்லை யென்றாலும்
பாசமாய் அழைத்தாய்
சட்டைப் பையின்
கனத்தைப் பார்த்து
பழகும் இவ்வுலகில்
என் மனதின் கனத்தையும்
பகிர்ந்துக் கொண்டாய்.......
என் துயரில்
ஆறுதல் சொல்லும்
ஓர் தோழியாய்
என் தவறில்
என்னை கண்டித்திடும்
எந்தையாய் இருந்தாய்.....
தன் தேவைகளுக்கே
இறைவனை நாடுவோர் மத்தியில்
எனக்காய் என் தேவைக்காய்
உபவாஷீத்து
வேண்டுதல் செய்தாயே.....
நீ என்னுடன்
பழகியது
சில நாளென்றாலும்
நீ என்றும்
நான் மறவா
எந்தன் பிரியமானத் தோழி தானடி.........
நான் என்
வாழ்வின்
சாதனையில் உயரத்தில் இருந்தாலும்
நான் ஏறிய
படிக்கட்டுகளாய் என்றும்
உன் நட்பை பெருமையாய்
உலகிற்கு எடுத்துக் கூறுவேன்.........
Subscribe to:
Posts (Atom)