
என்னால் முடியாது
என்றி ருந்தேன்
ஏன் முடியாது என்று
என்னை சிந்திக்க வைத்தாள்!!!!!
என்னால் முடியுமா
என்றி ருந்தேன்
உன்னால் முடியும் என்று
என்னை முயற்சிக்க வைத்தாள்!!!!!
எல்லாம் இழந்தேன்
என்றி ருந்தேன்
இறக்க வில்லை என்று
என்னை உணர வைத்தாள்!!!!
எல்லம் தோற்றேன்
என்றி ருந்தேன்
" நீ சரியாக
முயல வில்லை என்று
எந்தவறுகளை திருத்த வைத்தாள்!!!!!
உதவுவார் யாருமில்லை
என்றி ருந்தேன்
" நீ உதவி வாங்கிட அல்ல
உதவியளித்திட பிறந்தவன் என்று
என்மதிப்பை உணர வைத்தாள்!!!!!
முன்னேற பாதையில்லை
என்றி ருந்தேன்
" நீ துணிந்து முதலடி
எடுத்து வை அதுவே
பிறர் பின்பற்றும் பாதையாகும்" என்று
என்னை முன்னேற்றப்
பாதையில் நடக்க வைத்தாள்!!!!!!
அவள் தான்
என் தோழி........
என் இன்பத்தில் அல்ல
என் துன்பத்தில் மட்டும்
பங்கு கொண்டவள்
என்றென்றும் அவள்
என் தோழி...................
No comments:
Post a Comment