வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 23, 2010

திருமணமானவர்களின் நகைச்சுவைகள்

குடி குடியைக் கெடுக்கும்னு சொல்றது ரொம்ப சரி

எ‌ப்படிடா சொ‌ல்ற

கல்யாணம் ஆனதும் மனைவி குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாளே.

********** *******************

உங்களுக்கும் உங்க கணவருக்கும் பொதுவான அம்சம் என்ன்? ‌

ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் ஆச்சு.
********** *******************

கணவன் : நம்முடைய திருமண நாளை நீ எப்படி கொண்டாட விரும்புகிறாய்?

மனைவி : நான் இதுவரை போய் பார்க்காத இடத்திற்கு போக வேண்டும்
என்று விரும்புகிறேன்.

கணவன் : அப்படியா.... சரி அப்போ நம்ம வீட்டு கிட்சனுக்குப் போகலாம்.
********** *******************

மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்?

சினேகிதி : அ‌ப்படியா... ந‌ல்ல ‌விஷயமா‌ச்சே.. அதுக்கு முன்னாடி எ‌ப்படி இரு‌ந்தா‌ர்.

மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்
********** *******************

கணவர் :விவாகரத்திற்கு முழு காரணம் எ‌ன்னோட...

நண்பர் : யாருடா?

கணவர் : எ‌ன்னோட திருமணம்தா‌ன்.
********** *******************

நண்பர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

கணவர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய
கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்

********** *******************
நண்பர் : நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் மனைவியின் கைகளை
பிடித்தபடியே இருக்கின்றீர்கள்.

கணவன் : நான் கையை விட்டுவிட்டால் உடனே அவள் பொருட்கள்
வாங்க கடைக்குச் சென்றுவிடுவாள்.
********** *******************
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை
காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு
வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!
**************************

கணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை!

மனைவி : பின்ன இருக்காதா . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!

கணவன் : ?!?!?
**************************

கணவன் : எப்போதெல்லாம் நீ மனவருத்தத்துடன் இருக்கிறாயோ அப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் போய் நின்று கொண்டு, நீ எவ்வளவு
அழகாக இருக்கிறாய். என்னால் நம்பவே முடியவில்லை என்று சொல்.
உனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.

மனை‌வி : ‌நிஜமாகவா...

கணவன் : ஆனால் இதை அடிக்கடி செய்ய வேண்டாம்.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
**************************

மனைவி : ஏங்க டி.வில படத்தைப் பார்த்து ஏங்க அழுகிறீங்க?

கணவன் : அடியே, அது படமல்ல, நான் வாழ்க்கையில் கடைசியாய்
சந்தோஷமாய் இருந்த நாள், அதாண்டி நம்ம கல்யாண சிடி......

மனைவி : அதுக்கு என்ன இப்போ?

கணவன் : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே என்று நினைத்து அழுகின்றேன்.....

**************************

No comments:

Post a Comment