வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, June 24, 2010

உண்மைச் சம்பவம்...!!

எங்களது குடும்பத்தினர் அணைவரும் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். மேலும் சில நேரங்களில் சில சம்பவங்கள் எதிர்பாராமல் பெரிய "காமெடி" ஆகி விடுகின்றது. அவற்றில் ஒன்றுத் தான் இந்த‌ உண்மைச் சம்பவம்..........

என் தங்கையின் மகளுக்கு (ஒரு வயது குழந்தை) காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தோம். அப்போது எனது அம்மாவுக்கும், எனது சகோதரிக்கும் இடையே தொலைப் பேசியில் நடந்த ஒரு உரையாடல் :

அம்மா : என்ன பாப்பா, எல்லா விஷயத்திற்கும் ஏற்பாடு பண்ணியாச்சா?

சகோதரி : பண்ணிட்டேன் அம்மா, டேபிள் சேர்க்கு அவர் (கணவர்) இப்போ தான் சொல்லப் போறார் அம்மா.

அம்மா : காது குத்த ஆசாரிக்கு சொல்லியாச்சா?

சகோதரி : அதுக்கு வேற சொல்லனுமா..... இப்பத் தான் வந்துட்டுப் போறார்......

அம்மா : (புரியாமல்) இப்பத் தானா, எதற்கு ?????/

சகோதரி : வீட்டு ஜன்னல்ல ஓட்டைப் போட இப்பத்தான் ஆசாரி வந்து முடிச்சிட்டுப் போறார், ம் மறுபடியும் வரச் சொல்லனும்மா???????

(என்னத் தோழர்களே புரிந்ததா என் அம்மா சொன்னது " காது குத்தும் ஆசாரி" ஆனால் என் தங்கைச் சொன்னது " மர ஆசாரி"... )

No comments:

Post a Comment