வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 23, 2010

என் இணையத் தோழி ஜெப ராணிக்கு.........

என் பிரியமான தோழியே,,

இணையத் தளத்தில்
அறிமுக மானாய்
நண்பன் என்றழைத்து
நட்பை மட்டுமே பரிமாறினாய்....

நாம் நம்மை
பார்க்க வில்லை யென்றாலும்
பாசமாய் அழைத்தாய்

சட்டைப் பையின்
கனத்தைப் பார்த்து
பழகும் இவ்வுலகில்
என் மனதின் கனத்தையும்
பகிர்ந்துக் கொண்டாய்.......

என் துயரில்
ஆறுதல் சொல்லும்
ஓர் தோழியாய்
என் தவறில்
என்னை கண்டித்திடும்
எந்தையாய் இருந்தாய்.....

தன் தேவைகளுக்கே
இறைவனை நாடுவோர் மத்தியில்
எனக்காய் ‍ என் தேவைக்காய்
உபவாஷீத்து
வேண்டுதல் செய்தாயே.....

நீ என்னுடன்
பழகியது
சில நாளென்றாலும்
நீ என்றும்
நான் மறவா
எந்தன் பிரியமானத் தோழி தானடி.........

நான் என்
வாழ்வின்
சாதனையில் உயரத்தில் இருந்தாலும்
நான் ஏறிய‌
படிக்கட்டுகளாய் என்றும்
உன் நட்பை பெருமையாய்
உலகிற்கு எடுத்துக் கூறுவேன்........
.

No comments:

Post a Comment