வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 23, 2010

என் மனைவி....

இறைவனால்
எனக்காக
எனக்கு மட்டும்
அளிக்கப் பட்ட‌
உயிருள்ள பரிசு அவள்.......

தேடித் தேடி
அலைந்தேன் அவளைக் காண‌
ஆனால்
தேடி வந்தாள்
என் வாழ்வில் இணைய..

மனங்கள் இணைந்தன‌
ந‌ம்
குடும்பங்களும் இணைந்தன‌

தோல்விகளே
கண்டு வந்த‌
என் வாழ்வில்
நீ தான் எந்தன்
முதல் வெற்றி.....

எப்போதும் உந்தன்
புன்னகை முகம் கண்டால்
போதுமடி எனக்கு
உணவு ஒன்றும் வேண்டாம்.....

உன்னை மட்டுமல்லாது
என்னையும்
நின் சேயையைப் போல்
கவணிக்கும்
நீ போதுமடி எனக்கு.......

தோல்விகளால் துவண்ட‌
எனக்கு இறைவன் அளித்த‌
ஆறுதல் பரிசு.......

என்மீது நான் கொண்ட‌
நம்பிக்கையை விட‌
உன்மீது நான் கொண்ட‌
நம்பிக்கை அதிக‌மடி

உன் ஆறுதல் வார்த்தைகள்
போதுமடி.... அதற்காகவே
எத்தனை முறை வேண்டுமானாலும்
இன்னும் தோற்க
தயாராக உள்ளேன்.......

நின் தூக்கத்திலும்
என்மீது கொண்ட
அன்பை
நான் உணர்கின்றேன்.....

உன்னைப் பற்றி
கவிதை எழுதத் தான்
நாட் கணக்கில்
வார கணக்கில்
மாத கணக்கில்
யோசிக்கி ன்றேன்.... ஆனால்
வார்த்தைகள் ஒன்றும்
தோன்ற வில்லை......

அப்போது தான்
என் மனச் சாட்சி சொல்லியது
" இதயத்திற்கு அப்பால்
உள்ளவர்களை நினைத்து
கவிப் பாவும் பாடலாம்
கட்டுரையும் எழுதலாம்....
ஆனால் உன்
இதயமாகவே வாழ்பவளைப் பற்றி
எழுத இன்னும்
உலக மொழிகளில்
வார்த்தைகள் இல்லை நணபரே"" என்று....

என்
வாழ்க்கைப் பயணத்தின்
நின் முகங்கண்டே
என்
இறுதி மூச்சை
நிறுத்த வேண்டும்......

No comments:

Post a Comment