வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 23, 2010

காதல்...... காதல்...... காதல்....

விரித்த வலையில்
தானே மாட்டும்
அதிசயம்
காதலில் மட்டும்...........

விழுந்தவர் வீழ்ந்தாலும்
விழ வைத்தது
என்றும் அழியாது.............

சில நேரங்களில்
குப்பை மேட்டையும்
கோயில் கோபுரமாக்கும்...
கோயில் கோபுரங்களையும்
குப்பை மேடாகும்.....

சாதாரண மானவனையும்
சாதிக்க வைக்கும்

காதல்
இருபுறமும்
பட்டை தீட்டிய‌
வாள்......

காதலுக்காய் மரித்தோர் பலர்
ஆனால்
காதலென்றும்
உயிர்ப்பலி கேட்டதில்லை.......


காதலர்கள் மரித்தாலும்
காதலென்றும் மரித்த தில்லை..!

No comments:

Post a Comment