வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 17, 2015

யார் தலைவர்????????????????

தமிழினத்தின் விடுதலைக்கு
வீட்டிற்கு ஒரு பிள்ளை கேட்டு
தனது குடும்பத்தில்
மூன்று பிள்ளைகளையும்
விதைத்திட்டவர் தலைவரா???????

பிள்ளைகளின் பதவிக்காக‌
தமிழினமே அழிந்த பொழுது
அமைதி காத்து
நாற்காலியை டில்லிக்கு நகர்த்தி
பதவி பிச்சை கேட்டவர் தலைவரா?????????

தமிழினம் அழிந்தபோது
தமிழுக்காய் மாநாடு
என்று கூவி கூவி
தன்புகழ் பாட வைத்தவர்
தலைவரா???????????????????

பேச்சுவார்த்தை என்றழைத்து
இராணுவ பாதுகாப்பினில்
பிள்ளைகளை சொல்லி
மிரட்டிய போதும்
மிரளாமல் தெளிவாக‌
தமிழினத்தின் நலனுக்காய்
பேசியவர் தலைவரா.............????

பேசிப்பேசி அடுத்தவரை
உசுப்பேற்றி சுயநலனுக்காக‌
அடுத்தவரை பலிக் கொடுக்காது
தன்னையே மாதிரியாக்கி
தான் வாழ்ந்ததையே
பிறருக்கு பாடமாக்கியவர்
தலைவரா.......................

தமிழர்களுக்காக‌
ஆட்சி மேடையேறி
தமிழர்களின் நலனை விட்டு
தனக்காக சொத்து சேர்த்தும்
கோடி கோடியாக பணம்
சேர்த்தவர் தலைவரா??????????

உலகமெங்கும் உறவுகள் இருந்தும்
உதவிட கரங்கள் இருந்தும்
தனக்கென்றும் குடும்பத்திற்கென்றும்
ஒன்றும் சேர்க்காது
தமிழினத்தின் நலனை சிந்தித்தவர்
தலைவரா????????????????????

தமிழினம் தமிழினம்
என்று மேடையில் மட்டுமல்லாது
சமூகவியலிலும் போரியியலிலும்
தமிழினை வளர்த்தவர்
தலைவரா???????????????????

மதுக் கடைகளை திறந்து
உணர்வுகளை அழித்து
மக்களை எல்லாம்
சிந்திக்க விடாது
மந்தைக ளாக்கியவர்
தலைவரா???????????????????????

யார் தலைவர்
தமிழினமே சிந்தித்திடு

No comments:

Post a Comment