வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 17, 2015

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........> போராடுவோம் போராடுவோம்




#ஜோ



போராடுவோம் போராடுவோம்

இறுதிவரை போராடுவோம்

போராட மறந்தால்
மரணம் உறுதி என்றெண்ணி
போராடுவோம்

தமிழா தமிழா
மதுவில் மயங்கியது போதும்
போராடுவோம் போராடுவோம்
போராடுவதை நிறுத்திவிட்டால்
வெறும் பிண்டங்களாவோம்

தமிழன் தமிழன்
என்று பழம்பெருமை
பேசுவதை நிறுத்தி
போராடுவோம் போராடுவோம்

இன்னும் ராஜராஜ சோழன்
கட்டிய கோவிலை
பெரியதாக எண்ணியே
மதி மயங்கி திரியாது
இப்போது இழக்கின்ற‌
மரியாதையினை மீட்க‌
போராடுவோம் போராடுவோம்

திராவிடனாய் அல்ல‌
ஆரியனாய் அல்ல‌
வந்தேறியாய் அல்ல‌
கட்சியினராய் அல்ல‌
ஜாதியாய் அல்ல‌
தமிழராய் போராடுவோம்

கருப்பு சட்டையென்றாலும்
வெள்ளை சட்டையென்றாலும்
மஞ்சள் துண்டுயென்றாலும்
ஒன்றாவோம் ஒன்றினைவோம்
தமிழராய் போராட‌

போராடுவதை நிறுத்தினால்
அவைகள் நமக்கெதிராக‌
போராடி வென்றுவிடும்.......

No comments:

Post a Comment