வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 17, 2015

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........> மரணம்

மரணம்


அன்பு ஆணவம்
ஆசை அரட்டை
இச்சை இரக்கம்
ஈசனுறவு* புகழ்
உறவு மகிழ்வு
ஊண் உடை
துக்கம் கஷ்டம்
நஷ்டம் லாபம்
காதல் காமம்
ஆடம்பரம் ஆளுதல் 
என‌ அனைத்தையும்
ஏற்றும் விரும்பியும்
விடாது தொடர்ந்து 
துடிக்கும் இதயம்
ஏற்காது ஒரு நிமிடம்
துடிப்பினை நிறுத்தும் போது
தான் ஏற்றுக் கொண்ட‌ 
தன்னை ஏற்றுக் கொண்ட‌,
தான் விருப்பங் கொண்ட‌
தன்னை விரும்புகின்ற‌,
தான் சுமக்கின்ற‌
தன்னை சுமக்கின்ற‌,
தான் நேசிக்கின்ற‌
தன்னை நேசிக்கின்ற‌,
அனைத்தையும் அனைவரையும் விட்டு 
சரீரம் தன் சேவைகளை
நிறுத்தி விடுகின்றது
ஒரேயொரு முறை இதயம்
தனது வேலையினை
நிறுத்தும் போது!

மனிதனுக்காய் எதையும்
சிந்திப்பதில்லை.........
மனிதன் சிந்திக்கும்
நேரத்தில் இதயம்
வேலையினை நிறுத்துவதுமில்லை.
மனிதனை நேசித்த‌
மனிதன் விரும்பிய
அனைத்தும் சுற்றியிருந்தாலும்
அவன் மரணத்தை
தடுப்பார் யாருமில்லை
கேள்வி கேட்கவும் துணிவில்லை 
மரணம்......... அது
நோய் நொடியில் துடிக்கும்
ஒரு சரீர வேதனைகளுக்கு
ஒரு நிரந்தர‌ சுகம்!
உறவுகளின் மத்தியில்
ஒரு பேரிழப்பு!
உலகிலிருந்து அவனது
கடமைகளுக்கும் முயற்சிகளுக்கும்
கிடைக்கும் நிரந்தர‌ ஓய்வு

மரணம்..... மரணம்

வாழ்வினை முடிப்பவர்க்கு
மரணம் ஒரு மணம்
மனிதனை நேசிப்போர்க்கு
மரணம் ஒரு ரணம்.


படைப்புகளை விட்டு
படைத்தவனை நோக்கி

செல்ல ஆரம்பமாகும்
பயணம் மரணம்..........

அர்த்தம் : *ஈசனுறவு : இறைவனுடனான உறவு

No comments:

Post a Comment