வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 17, 2015

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........> ஆலோசனை

‪#‎ஜோ‬

நமது பணத்தையும்
செலவழித்து
நமது நேரத்தையும்
செலவழித்து
திரையினில் அடுத்தவரின்
பொய் முகத்தை
ரசித்து வருவதை விட‌


நேரஞ் செலவழிந்தாலும்
பணம் செலவானாலும்
ஆதரவற்ற குழந்தைகளில்
இல்லங்களுக்கு சென்றால்
இருக்கும் நேரமெல்லாம்
அவர்களின் உண்மை முகத்தையும்
புன்னகையையும்
கவலை மறந்திட்ட
மலர்களின் அழகினையும்
கண்டு ரசித்து வரலாம்...........................


---------------------------------------------------------------------------------

பணமிருந்தும் வசதியிருந்தும்
நிம்மதி தேடி
அமைதியை தேடி
ஊர் ஊராக‌
காடு மலையென்று
அலைந்து சென்று
வழிப்பாட்டு தலங்களுக்கு
செல்வதை விட‌


அருகில் இருக்கும்
அனாதை இல்லங்களுக்கும்
முதியோர் இல்லங்களுக்கும்
சென்று உங்கள்
பணத்தையும் நேரத்தையும்
செலவிட்டால் 

நீங்கள் தேடும்

 நிம்மதியும் அமைதியும்

உங்கள் வீட்டில்

உங்களை தேடி வந்து

 குடி வருமே.......................

No comments:

Post a Comment