வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 17, 2015

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்................... "ஏதேதோ சொல்ல நினைக்கின்றேன்"

ஏதேதோ சொல்ல நினைக்கின்றேன்
ஆனால் மனம் சொல்ல நினைப்பதை
தட்டச்சு பலகையில் அடித்திட‌
இதய கனத்துடன்
விரல்களும் மறுக்கின்றன........

மனிதர்களின் பேச்சினை
நம்பி நம்பியே
உண்மை முகம் தெரியாது
ஏமாறுகின்றேன் பலமுறை

ஏமாந்த பின்னரோ
வருத்த மடைவது ஏனோ
மனம் மட்டுமே..........
ஏமாந்தோம் என்பதை விட‌
ஏன் ஏமாந்தோம் என்று
நினைத்தால் மனம் வலிக்கின்றது.......

ஏதேதோ சொல்ல நினைக்கின்றேன்
நினைப்பதை யெல்லாம்
சொல்லிடவும் இயலவில்லை
சொல்லாமலும் தெளியவில்லை
மனதின் வலி..............

அழகாயிருக்கின்றது என்றே
நேசிக்கின்றேன்
ஆனால் கலையும் போது தான்
தெரிகின்றது
அது நிஜமல்ல‌
நிழலென்று.....................

வார்த்தை ஜாலங்களில்
மயங்கி மயங்கியே
தெரியாவிடினும் இறங்கினேன்
முடியுமென்று நம்பியே......
நம்பினோர் உதறிடும் போது
தான் தெரிகின்றது
இறங்கிய வழியினில்
நான் மட்டுமேயென்று....................

சொல்லத்தான் நினைக்கின்றேன்
சொல்லவும் தவிக்கின்றேன்

மாற்றம் வருமென்று
எண்ணி எண்ணியே
செயல்களை புரிகின்றேன்
மாறி மாறி ஆனால்
மாற்றங்கள் எல்லாம்
ஏமாற்றங்களாய் மாறியே
வலியினை கொடுக்கின்றதே

கை கோர்த்த‌
கரங்கள் எல்லாம்
என்னுள் இணைந்தே
என்றே நம்பினேன்
ஆனால்
இணைந்த கரங்களில்
எல்லாமே கறைகள் உள்ளதே..............

அன்பாய் பழகி
நட்பாய் இனைந்து
பணத்தையும் எண்ணாது
பழகினாலும் கொஞ்ச நாட்களில்
கானல் நீராய் பொய்மை
மறைந்திடும் போது
அவரையும் மறுத்திட‌
மனம் மறுக்கின்றதே......

வார்த்தைகளில் கோட்டை
கட்டி கொடியேற்றுகின்ற‌
வல்லவர்களை எல்லாம்
நல்லவர்களென்று
நம்பி நம்பியே இன்று
எனது மதிப்பும்
சந்தேகத் திற்கிடமாய் ஆனதே.................

சொல்லில் காட்டிடும்
வேகத்தை
செயலில் காட்டிடவும்
இயல வில்லை எனில்
செயலினை அடுத்தவரிடம்
ஒப்படைத்த‌தால்.............

ஏதேதோ சொல்ல நினைக்கின்றேன்

சொல்லிடவும் இயலவில்லை

ஏற்றிடவும் இயலவில்லை

No comments:

Post a Comment