வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 20, 2016

நீ வருவாயென்று



அத்தான் வருவானென்று
வாசலில் விழி வைத்து
வழியை நோக்கிடும்
பெண்ணே!

உந்தன் முகத்தில்
தெரிகின்றதடி
 அன்பும் காதலும்!

வருபவனுக்கு
விருந்தளித்திடும் உந்தன்
ஏக்கம் தெரிகின்றதடி
உன் கண்களில்!!

கண்ணாடி வளையலோசை
சிணுசிணுங்க
நின் பேச்சொலியில்
தன்னையே மறப்பானடி
உன் அத்தான்!!!!

No comments:

Post a Comment