வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 20, 2016

அழகின் அழகே....................

செடியில் உதிர்ந்த
பூக்கள் எல்லாம்
உந்தன் விரல்
பட்டவுடன் மீண்டும்
மலர்கின்றதடி பூக்களாய்!!



உன் கைவிரல்
செய்திடும் அதிசயம்
அழகான பூ மாலையாய்!!

உன் கண்களில்
பார்வையெனும் நீரினால்
வாடிய மலர்களும்
மனந் தருகின்றதடி!!

பாவாடை தாவணியில்
அழகி உன்னை
கண்டதால் இறைவனும்
கற் சிலையானானடி!!

பெண்கள் எல்லாம்
 அழகு தான்
ஆனால் நீ மட்டும்
அழகின் அழகியடி!!

உன் விரல்பட்டு
கோர்க்கின்ற மாலையும்
அழகாய் இறைவனடி
சேருமடி பெண்ணே!!

No comments:

Post a Comment