வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 13, 2016

பணம் பணம்..........................


பணம் பணமென்று
எண்ணியெண்ணி
சேர்த்திடும் மனிதா
இன்று உயிர் பிரிந்தால்
அப்பணம் யாருக்கு சொந்தம்?????????

மரணம் வரும்வேளையிலே
மரணத்தை தள்ளிப்போட
உன் பணம் உதவிடுமா????????





இன்று நீ
உன்னை வருத்தி
எதிலும் எல்லாவற்றிலும்
கூட்டல் கழித்தல் பார்த்து
லாப நட்டம் பார்த்து
உனக்காக
சேர்க்கும் பணத்திற்கு
நீ மரித்தவுடன்
அனுபவிப்பது யாரோ???????????????????

செய்திடும் செய்யும்
நற்காரியங்களே
மரணத்தை தள்ளி
இன்பமாய் வாழ
வழி வகுத்திடுமே............

மரணம் வருவது
உனக்கும் தெரியாது
வந்தபின்னும் நடப்பதும்
உனக்கு தெரியாது
வாழும்வரை வாழ்க்கை
பிறருக்கும் பயன்படட்டுமே!!!!!!!!
                               
பிறப்பிற்கும்
இறப்பிற்கும்
இடையிலே வாழ்க்கை..
வாழும் வரையிலும்
நாம் மட்டுமல்லாது
பிறர் வாழ்க்கையிலும்
நம் உதவி சிறியதாவது
இருக்கட்டுமே....................
வாழும் வரையில்
வாழ்க்கையை அனுபவிப்போமே
பிறரையும் மகிழ்வித்து

No comments:

Post a Comment