வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 20, 2016

ஜோ' எண்ணச் சிதறல்கள்


நம் சந்தோஷத்தை
அல்ல
நம் துக்கத்தை
பகிர்ந்துக் கொள்வதற்கு
மனசு யாரை
முதலில் தேடுகின்றதோ
அவரே உண்மையான
நண்பன்!!!!!!

           ******************************************

இல்லாதவன் சொல்
அம்பலம் ஏறாது
என்பது பழமொழி!!
இன்றும் இல்லாதவன்
சொல் இருப்பவர்க்கு
ஏறாது என்பதே நடைமொழி!!!
சொல்கின்ற
நிலையி லிருப்போர்
உயந்திருக்கும் போது
கேட்கின்ற
நிலையி லிருப்போர்
என்ன சொன்னாலும்
அது தண்ணீருக்குள்
கதறிடும்
மீனின் குரல் போன்றே
வெறுங் குமிழாகிடும்!!!!

             ****************************


மாற்றம் ஒன்றே
மாறாதது
ஆனால் அந்த
மாற்றமும்
இல்லாதவனை
நோக்கி அல்ல
இருப்பவனை நோக்கியே
விரைவாக!!!!!

  **************************************


No comments:

Post a Comment