வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

செய்தி ::::::: டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு நர்சிங் கல்லூரி மாணவிகள் போராட்டம்: போலீசார் தடியடி; 66 பேர் கைது

                          மாணவிகளின் விடுதிக்கு எதிரில் இருந்த‌ மதுக் கடைகளை இடமாற்றம் செய்ய சொல்லி, போராடிய மாணவிளை தடியடி நடத்தியும், கைது செய்தது கண்டனத்திற்குரியது. மக்களை ஆள்கின்ற அரசு, படிப்பதற்காகவும்,பிழைப்பிற்காகவும் குடும்பத்தையும், உறவுகளையும் விட்டு உழைக்கும் மாணவிகளின் திறமையினையும், நலனையும் நசுக்கப் பார்க்கின்றதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.... மாணவிகளின் போராட்டத்திற்காக "டாஸ்மார்க்" கடையினை மூடியிருந்தால், தமிழர்களின் நலன் மீதான அக்கறையினை பாராட்டியிருக்கலாம்.. ஆனால் மது வியாபாரத்திற்காக, எதிர்த்து போராடியவர்களை தடியடி நடத்தியும், சிறை வைத்தும் தனது அராஜக செயல்களை காட்டியுள்ளது.

                              அதுவும் ஒரு பெண் முதல்வராக இருக்கின்ற மாநிலத்தில் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது காவல் துறை மூலம் அடாவடி செய்த அரசின் செயலை தமிழர்களே வன்மையாக கண்டியுங்கள்.



No comments:

Post a Comment