வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

ஜோ' எண்ணச் சிதறல்கள்


தோல்விகள்
சிலருக்கு பயத்தையும்
சிலருக்கு தைரியத்தையும்
கொடுக்கின்றது.................

                ************************************************************

எதிலும் சேராதவரைக்கும்
ஒருவன் தனிமனிதன்
எதிலாவது சேர்ந்துவிட்டால்
அவனும் அடிமையே

                     ****************************************************************


நாமிருக்கும் போது
ஒன்றும் சொல்லாத உலகம்
நாமில்லாத போது
நம் குறைகளை பேசிடும்

                     ****************************************************************

ஒன்றுமே பேசாமல் இருப்பவர்களை கூட நம்பலாம்.....ஆனால் வெற்று வாயில் பந்தல் போடுபவர்களை நம்பவே கூடாது........ என்ன செய்ய..???? பட்டால் தானே தெரிகின்றது..........................
  ****************************************************************

வாய்ச்சொல்லில்
வீரராய்
சொல்லி சொல்லி
அடுத்தவரை நம்ப வைத்து
வலம் வந்தாலும்
செயல்களின்
முடிவு தெரிந்திடும் போதோ
உடலின் அங்கங்கள் எல்லாம்
நடுங்குமையா நடுங்கும்.......

 ****************************************************************


ஒருவரை முழுவதும் நம்பி செயல்படும் போது அவரின் சொல்கள் மீது சந்தேகம் வருவதில்லை.ஆனால் அவை காரியங்களில்லா "வெற்று சொற்களாக" மாறிடும் போது, அவரின் மீதான நம்பிக்கையே கேள்விக் குறியாகிவிடுகின்றது................

 ****************************************************************

ஏமாற்றியவர்கள் எல்லாம் தலை நிமிர்ந்து, புன்னகையுடன் வெளியில் சுற்றி பழகியவர்களை விட்டுவிட்டு, புதியவர்களோடு பழகிக் கொண்டு, அடுத்த செயல்களுக்கு ஆரம்பமாகிவிடுகின்றனர்.......
ஆனால் ஏமாறியவர்கள் மட்டுமே ஏமாறியதால் ஏற்பட்ட வடுவினை நெஞ்சுக்குள் வெளியிலும் சொல்ல முடியாது, தங்களுக்குள்ளே போட்டு, வேதனையுடன் வாழ்கின்றனர்............ எத்தனையெத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஏமாறிய வடு இதயத்தினுள் ரணமாகவே மாறாமல்


No comments:

Post a Comment