வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

ஜோ வின் எண்ணங்கள்.................



‪#‎ஜோ‬

இல்லாததை இருப்பது போல்
பேசவும் தெரியவில்லை!
இருப்பதை பெரிதாக்கி
பேசவும் தெரியவில்லை!
பொய்களையும் அடித்துபேசி
உண்மையாக்கவும் தெரியவில்லை!
இன்னும் நான் உலகத்தில்
வாழ வளர வேண்டியுள்ளது போல!!!!!!!!

*****************************************************

‪#‎ஜோ‬

எதிர்பார்த்தவை எல்லாம்
பொய்யாகி போனாலும்
எதிர்பார்த்தவைகளை
மறக்கவு மியலாது
மறைக்கவு மியலாது
வாழ்கின்றேன் நான்..............
எதிர்பார்ப்புகள் இல்லாமல்
வாழ முயன்றாலும்
மனமோ விடவில்லை
ஏதோவொன்றை தேடிதேடி
எதிர்ப்பார்பதை விரும்புகின்றது.........
எதிர்பார்ப்பில்
ஏமாற்றங்கள் தொடர்ந்தாலும்
மாற்றங்கள் எதுவுமில்லை
ஆனாலும்
எதிர்பார்ப்புகள் மட்டும்
மாற்றங்களை நோக்கி
தொடர்ந்தப் படியே........................

****************************************************

‪#‎ஜோ‬

மனமெனும்
கண்ணாடி கூட்டினை
வெளியிலிருந்து
உடைத்திடும் உறவுகளின்
செயலை விட‌
உள்ளிருந்து கோடுகளாய் கீறிடும்
உறவுகளின் வலியே
மவுனமாக மரணத்தை
அனுபவிக்க செய்கின்றது.............................

***********************************************

‪#‎ஜோ‬

வலிகளும் வேதனைகளும்
நிறைந்த வாழ்க்கையினில்
கானல் நீராய் மட்டுமே
இன்பங்கள் தெரிகின்றது.......................
அதையும் நாடியே
ஓடிஓடி செல்வதிலேயே
வாழ்வின் பொழுதுகள்
கழிகின்றது நிழலாய்
தொடர்ந்திடும் வேதனைகளோடு.....................

*************************************************

No comments:

Post a Comment