வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

மது உனக்கு தேவையா ???????????????

‪#‎ஜோ‬


தமிழா தமிழா
உணர்வுகளையும்
நினைவுகளையும்
மரத்து போக செய்யும்
மது உனக்கு தேவையா
என்பதை இன்றே சிந்தி..............


தமிழினமே தமிழினமே
மது விலக்கிற்காய்
போராடும் அன்பர்கள்
அவர்களின் பதவிக்காகவும்
அவர்களின் புகழுக்காகவும்
அவர்களின் பொழுது போக்கவும்
போராட வில்லை.......................


நாளைக்கு உங்கள்
வீட்டின் பிள்ளைகள்
ஆண்கள் மட்டுமல்ல‌
பெண்களும் மதுவினால்
சீரழியக் கூடாது என்பதற்காகவே
இன்று வீதிகளிலும்
சாலைகளிலும் போராடுகின்றனர்...........



காக்கி சட்டை போட்ட‌
கனவான்களே
நாளைக்கு உங்களின்
பிள்ளைகள் மதுவால்
சீரழியக் கூடாது என்றும்
அவர்கள் போராடுகின்றார்கள்..............




வீதிக்கு வந்து
போராடும் பெண்கள்
எந்தவொரு தலைவரும்
சொல்லி போராடவில்லை
தங்கள் குடும்பம்
மதுவினால் சீரழிந்த‌
வேதனையிலும் மற்ற‌
குடும்பங்களை காக்க
மதுவினை ஒழிக்க‌
போராடுகின்றார்கள்.......................


சமூக பிரச்சனைக்காய்
போராடி போராடி
வீதியில் காவல் துறையின்
பூட்ஸ் கால்களால்
மிதிப்பட்டும் கொண்ட‌
கொள்கை மாறாது
போராடும் சகோதரிகளை
பார்த்தும் இன்னும்
உணர்வில்லையா தமிழர்களே 
பொறுத்தது போதும்





உணர்வுகளையும்
நினைவுகளையும்
மழுங்க செய்யும்
மது வேண்டாம்
மதுவில்லாத சந்ததியாக‌
நம் பிள்ளைகள் வளர‌
இன்று தான்
போராட வேண்டும்................................

கட்சி பாராது
ஜாதி பாராது
மதம் பாராது
தமிழர்களாய்
மனிதர்களாய்
இணையுங்கள் ஒன்றாக‌
நாம்
மரத்து போன
தமிழன் அல்ல‌
மறத் தமிழர்கள்
என்பதை ஆள்கின்ற அரசுக்கு
புரிய வைத்திடுவோம்..................








No comments:

Post a Comment