வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Sunday, September 11, 2016

காதல் வந்தாலே (பாகம் 3)

** காதல் வந்தாலே **
படிக்கும் கல்வியில்
காதல் வந்தால்
முதலிடம் பெறலாம்!!
பழகும் நபர்களிடம்
காதல் வந்தால்
நட்பில் சிறக்கலாம்!!
செய்திடும் பணியில்
காதல் வந்தால்
மேன்மை அடைந்திடலாம்!!
உள்ளத்தை நேசிக்கும்தோழமையில்
காதல் வந்தால்
சிறந்த வாழ்க்கை
துணையை பெற்றிடலாம்!!!

இல்லறத்தில்
காதல் வந்தால்
குடும்பம் கோவிலாகலாம்!!
பிள்ளைகளிடத்தில்
காதல் வந்தால்
குடும்பம் பூந்தோட்டமாகும்!!!
முயற்சியில்
காதல் வந்தால்
வெற்றி அடைந்திடலாம்!!
எண்ணத்த்தில்
காதல் வந்தால்
சிறந்த மனிதனாகலாம்!!
சமூகத்தில்
காதல் வந்தால்
சிறந்த தலைவராகலாம்!!!!
காதல் வந்தாலே
மாறாத மனமும்
மாறிடுமே
அழகிய மலராய்
காதல் வந்தாலே
கந்தக மனமும்
மாறிடுமே
மனந்தரும் மல்லிகையாய்!!
காதல் வந்தாலே
பாறை மனமும்
மாறிடுமே
அல்லிதழ் இலையாய்!!!

No comments:

Post a Comment