வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Sunday, September 11, 2016

காதல் வந்தாலே (பாகம் 2)

** காதல் வந்தாலே **
காதல் வந்தாலே
எரித்திடும் ஆதவனையும்
பார்க்க துடிக்கின்றது
காதல் வந்தாலே
விழுந்திடும் சருகுகளையும்
ரசிக்க விரும்புகின்றது
காதல் வந்தாலே
இருளிலும் இனிமை
காண முடிகின்றது
காதல் வந்தாலே
முடியாத செயலெல்லாம்
முடிகின்றது விரைவாக!!!
காதல் வந்தாலே
மெல்லிசையையும் மனம்
ரசிக்க முடிகின்றது!!
காதல் வந்தாலே
நட்புக் கூட்டத்தின்
ஆதரவை ஏற்கின்றது!!
காதல் வந்தாலே
மணிப் பொழுதுகளெல்லாம்
நொடிகளாய் கரைகின்றது!!
காதல் வந்தாலே
கல்லூரி பாடவகுப்புகளும்
இனியதாய் மாறுகின்றது!!
             
காதல் வந்தாலே
வாழும் வாழ்க்கையினை
அழகாக்கும்
காதல் வந்தாலே
சுமையான வாழ்க்கையையும்
சுமையான பயணமாக்கிடும்!!
காதல் வந்தாலே
கடல்போன்ற வாழ்வில்
வெற்றி முத்தெடுக்க செய்திடும்!!
காதல் வந்தாலே
முட்காடாய் வாழ்விருந்தாலும்
பூந்தோட்டமாய் எண்ண செய்திடும்!!
காதல் வந்தாலே
ஓலைக் குடிசையிலும்
வாழ செய்திடும் சிறப்பாக!!!!

No comments:

Post a Comment