வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Sunday, September 11, 2016

காதல் வந்தாலே (பாகம் 1)



காதல் வந்தாலே
கிறுக்கல்கள் எல்லாம்
கவிதையாகின்றது!!
காதல் வந்தாலே
சுவைகள் எல்லாம்
மாறிவிடுகின்றது!!
காதல் வந்தாலே
நட்பின் கூட்டத்திலும்
தனிமையை நாடுகின்றது!!
காதல் வந்தாலே
விண்ணை பார்த்து
பேச வைக்கின்றது!!!
காதல் வந்தாலே
எதிர்ப்புகளை எதிர்க்க
துணிவு கொள்கின்றது!!!
காதல் வந்தாலே
தீய பழக்கமெல்லாம்
மாறி நல்லவனாக்குகின்றது!!
காதல் வந்தாலே
கடிகார   நொடி முள்ளும்
யுகங்களாய் தெரிகின்றது!!
காதல் வந்தாலே
சாலையோர பூக்களையும்
ரசிக்க வைக்கின்றது!!
காதல் வந்தாலே
பழைய திரைப்பட மெல்லடியையும்
கேட்க தூண்டுகின்றது!
காதல் வந்தாலே
கடினமான செயலெல்லாம்
எளிதாய் தோன்றுகின்றது!!
காதல் வந்தாலே
வெறுப்பு களெல்லாம்
விருப்பமாக தோன்றுகின்றது!!!
காதல் வந்தாலே
யோக நிலையில் மெய்
மறக்க செய்கின்றது!!
காதல் வந்தாலே
விழிகள் திறந்திருந்தாலும்
கனவு காண வைக்கின்றது!!
காதல் வந்தாலே
குழந்தைகளையும்
கொஞ்சிட தோன்றுகின்றது!!!!
காதல் வந்தாலே
பசி மறக்க செய்து
ருசி மறக்க செய்கின்றது!!!
காதல் வந்தாலே
துயரிலும் மறவாமல்
புன்னகைக்க செய்கின்றது!!!
காதல் வந்தாலே
மனதில் துணிவும்
முகத்தில் அழகும் வருகின்றது!!!

No comments:

Post a Comment