வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, November 8, 2016

பணம் பணம்............


மனிதா மனிதா
உன் வாழ்வின்
அடுத்த நொடியில்
நடப்பதை உன்னால்
உறுதிப்படுத்த இயலுமா?????

உன் கோபத்திற்கும்
உன் ஆணவத்திற்கும்
உன் பேராசைக்கும்
உன் செல்வத்திற்கும்
மரணம் விலகிடுமா?????

இந்த நொடியில்
நீ செல்வந்தனாக
இருக்கலாம்
நீ அறிவாளியாக
இருக்கலாம்
நீ யாராகவும்
இருக்கலாம்
ஆனால்
அடுத்த நொடியில்
உன் இருதயம்
நின்று விட்டால்
உன் பெயர் "பிணம்"
அதைப் புரிந்துக் கொள்


இந்த நொடியில்
அடுத்தவரை ஏமாற்றி
அடுத்தவரிடம் பறித்து
பணம் சேர்த்திருந்தாலும்
அடுத்த நொடியில்
நீ மரித்தால்
அப்பணம் உன்னுடையது அல்ல!!

நீ பணக்காரன்
நீ அரசியல்வாதி
நீ கோபக்காரன்
என்பதற்காக
மரணம் உன்னைவிட்டு
விலகிச் செல்லாது!!

வாழ்கின்ற நொடியினில்
நல் மனிதனாக
நல் தலைவனாக
நல் குடும்பஸ்தனாக
நல் தகப்பானக
நல் கணவனாக
நல் மனைவியாக
வாழ்ந்து விடு...................

No comments:

Post a Comment