வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, November 8, 2016

மனமெனும் குரங்கு ........


** மனமெனும் குரங்கு **

விலகிச் செல்வதை
விரட்டி விரட்டியே
விரும்புகின்றது!!!

விரும்பி வருவதை
விரும்பி ஏற்காமல்
விலகி விலகியே
விலகுகின்றது!!!!

வலிகளெ டுத்தாலும்
வலிக் கொடுத்தவர்
மனதிற்கு பிடித்து விட்டால்
வலிகளுக்கு மருந்திடவும்
அவரையே தேடுகின்றது!!!


கிடைக்காதென
அறிந்த போதிலும்
கிடைக்குமோ வென்ற
எதிர்ப்பார்ப்பினில்
காத்தே கிடக்கின்றது!!!


தப்பா சரியா
என்பதையெல்லாம்
புறந்தள்ளி
தான்
விரும்பிய வற்றை
எண்ணியே சுழல்கின்றது!!!

மனம் எண்ணியெண்ணி
நினைவுகளில் மோதிமோதி
செயல்களிலும் மனதின்
நிழல்கள் தெரிகின்றதே!!!

No comments:

Post a Comment